ETV Bharat / bharat

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கரோனா!

author img

By

Published : Mar 15, 2020, 10:12 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது.

corona virus
corona virus

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அம்மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கோவிட்-19 பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசு சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய மருத்துவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம், கேரளாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத்தில் 10 பேர் அனுமதி!

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவரும் வேளையில், கேரளாவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அம்மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கோவிட்-19 பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசு சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் ஒருவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய மருத்துவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்மூலம், கேரளாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத்தில் 10 பேர் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.