ETV Bharat / bharat

கடையடைப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர் கந்தசாமி! - puducherry latest news

புதுச்சேரி: தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வரும் 27ஆம் தேதி நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

puducherry
author img

By

Published : Nov 25, 2019, 5:07 PM IST

கடந்த 2000ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய நலச்சங்கத்தை புதுச்சேரி அரசு உருவாக்கியது. இந்நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்து தர வேண்டுமென தொழிலாளார் நலசங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து புதுச்சேரி அரசு, நலவாரியம் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் தொழிளாலர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தது ஆனால் இதுவரை நலவாரியம் அமைப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, நலவாரியம் அமைக்கக்கோரி தொழிற்சங்கங்கள், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 27ஆம் தேதி ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடர்பாக புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் அனைத்து தொழிற்சங்களுடன் தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கங்கள்ஆகியோர் பலர் பங்கேற்றனர். இதில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ள ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கு மேல் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நலவாரியம் அமைக்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் இரண்டு தினங்களுக்குள் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு - தர்மபுரியில் கடையடைப்பு!

கடந்த 2000ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய நலச்சங்கத்தை புதுச்சேரி அரசு உருவாக்கியது. இந்நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்து தர வேண்டுமென தொழிலாளார் நலசங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து புதுச்சேரி அரசு, நலவாரியம் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் தொழிளாலர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தது ஆனால் இதுவரை நலவாரியம் அமைப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, நலவாரியம் அமைக்கக்கோரி தொழிற்சங்கங்கள், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 27ஆம் தேதி ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடர்பாக புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் அனைத்து தொழிற்சங்களுடன் தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கங்கள்ஆகியோர் பலர் பங்கேற்றனர். இதில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ள ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கு மேல் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நலவாரியம் அமைக்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் இரண்டு தினங்களுக்குள் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு - தர்மபுரியில் கடையடைப்பு!

Intro:புதுச்சேரியில் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 27 தேதி பந்த் போராட்டம் வாபஸ் பெற்று உள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்


Body:புதுச்சேரியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தனித்தனியே நலவாரியம் அமைத்து தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என வலியுறுத்தி வருகின்றன கடந்த 2000ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கி நலச்சங்கத்தின் அரசு உருவாக்கியது இந்த நலச்சங்கத்தை நலவாரியமாக அமைத்து அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிலாளார் நல சங்கத்தினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்

இதற்கிடையே அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து புதுச்சேரி அரசு நல வாரியம் அமைக்கப்படும் என கடந்த பேச்சுவார்த்தையின்போது உறுதி அளித்திருந்தது மேலும் தீபாவளி பண்டிகை ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இதுவரை நலவாரியம் அமைக்க விடவில்லை பண்டிகை பணம் வழங்கப்படவில்லை என்றும் புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் 27ஆம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் இன்று சட்டபேரவை வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க ளுடன் தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 27 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒரு நாள் பந்த் போராட்டம் வாபஸ் பெற்றதாக தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்

இதுதொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது

அரசு சார்பில் இன்று தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றது என்றார் அப்போது தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தரப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது வரும் ஜனவரி மாதம் 10-ஆம் தேதிக்கு மேல் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விரைவில் நலவாரியம் அமைக்கப்படும் என்றார்
மேலும் தொழிலாளருக்கு வழங்கவேண்டிய தீபாவளி பண்டிகை ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் இரண்டு தினங்களுக்குள் வழங்கப்படும் என்றவர் தொழிற்சங்கள் அறிவித்த 27ஆம் தேதி ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றுள்ளதாக பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கள் தெரிவித்ததாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்






Conclusion:புதுச்சேரியில் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 27 தேதி பந்த் போராட்டம் வாபஸ் பெற்று உள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.