ETV Bharat / bharat

கிராமப்புறங்களுக்கான புதிய வளர்ச்சி மாதிரியை உருவாக்கும் நேரமிது

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாழ்வாதாரமிழந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் சென்றுள்ள நிலையில், தற்போது கிராமப்புறங்களுக்கான புதிய வளர்ச்சி மாதிரியை உருவாக்கும் நேரம் வந்துள்ளதாகத் தெரிகிறது.

author img

By

Published : Jul 10, 2020, 3:00 AM IST

to-tackle-migrant-crisis-india-needs-to-adopt-better-rural-development-models
to-tackle-migrant-crisis-india-needs-to-adopt-better-rural-development-models

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் போது, ​​லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வந்த நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதைப் பார்த்த பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதனால், வீடற்ற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரங்களைத் தேடி நகரங்களை நோக்கித் தள்ளுவதை விட, வீடற்ற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர்களிலேயே வாழ்வாதாரத்தை மீண்டும் வழங்குவதன் அவசியத்தை கரோனா தொற்றுநோய் வெளிப்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட உணவிற்காக ஆண்டுதோறும் தொலைதூர இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். நகரங்களில் இதுபோன்ற ஒரு வசதி அமைக்கப்பட்டால் மட்டுமே, காந்திஜியின் கிராம-சுயராஜ்ஜியம் கனவு நனவாகும். கிராமங்களில் வாழும் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு, பொருளாதார வசதி மற்றும் சுதந்திரமாக இருக்க தொழில்நுட்பம் ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கும்.

கிராமப்புறங்களில், இதுபோன்ற ஒரு அமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் அறிவு தளங்களின் (ஜன விக்ன வேதிகா) உதவியுடன் அரசாங்கத்தின் பொதுத்துறை-தனியார் கூட்டு மூலம் அமைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. வெவ்வேறு மதிப்பீடுகளின்படி, குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 7.2 கோடியிலிருந்து 11 கோடியாக உள்ளது. இந்த மதிப்பீடுகள் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருப்பதில் இந்தியா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

காந்தேய கிராம ஸ்வராஜ்

காந்திஜியின் கிராம சுயராஜியத்தின் எண்ணப்படி, கிராமங்களை பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வைப்பதே கிராமங்களுக்கான புதிய வளர்ச்சி மாதிரியாகும். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர், காந்தி சம்பாரன் (1917), சேவகிராம் (1920) மற்றும் வர்தா (1938) போன்ற கிராமப்புற இயக்கங்களுக்கு தலைமை தாங்கினார்.

கிராம மட்டத்தில் ஒரு பரவலாக்கப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதும், உள்கட்டமைப்பைக் உருவாக்கும் போது கிராமவாசிகளுக்கு பொருளாதார தன்னிறைவு மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதற்கான சூழலை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாக இருந்தது. உண்மையான ஜனநாயகத்தின் வேர்கள் தன்னிறைவு பெற்ற மற்றும் பொருளாதார மற்றும் சமூக சமமான கிராமங்கள் என்று அழைக்கப்படும் வளமான நிலங்களில் மட்டுமே விரிவடைய முடியும் என்று மகாத்மா வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு கிராமமும் ஒரு தனி குடியரசு அமைப்பாக செயல்படும்போது தான் கிராம சுயராஜ்யம் நிறுவப்பட்டதாகக் கூறலாம். இது ஒரு சுதந்திர தேசமாகும், இது தனது சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் போது அண்டை கிராமங்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது." என்று காந்தி கூறியுள்ளார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னம்பிக்கையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கிராம சுயராஜ்யம் என்பது அந்த கிராம மக்கள் உள்ளூரில் வேலைசெய்து அதிக உற்பத்தித்திறனுடன் அதிக வருமானம் ஈட்டுவதாகும். கிராமப்புற வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே முக்கியம் என்பதை அவர் அங்கீகரித்தார்.

அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய சர்காவை தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் புதுப்பித்தால் ரூ.1 லட்சம் (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.2.5 கோடிக்கு சமம்) வெகுமதி அளிப்பதாக அப்போதைய பிரிட்டிஷ் மற்றும் இந்திய செய்தித்தாள்களில் அவர் அறிவித்திருந்தது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், கிராமங்களுக்கு நவீன கால வசதிகள் வழங்கப்படுவதற்கு ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் 50 முதல் 100 கிராமங்கள் சேர்ந்து ஒரு வளாகம் உருவாக்கப்பட்டால், இணைஇருப்பிடம் மற்றும் சந்தைகளை உருவாக்க முடியும் என்றார்.

தொழில்நுட்பம் மூலம் சாலைகள், கட்டிடங்கள், தங்குமிடம், சேமிப்பு வசதிகள், அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து, கிராமவாசிகள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளலாம். இந்த இணைப்புகள் மூலம், கிராமங்கள் மற்றும் நகரங்கள் வளர்ச்சி பாதையில் எளிதாக நடைபோட முடியும். 2004 ஜனவரியில் சண்டிகரில் நடைபெற்ற இந்திய தேசிய அறிவியல் காங்கிரசின் 90ஆவது மாநாட்டில் கலாம் இந்த மாதிரியை வழங்கினார்.

தன்னிறைவு பெற்ற கிராமங்களின் அடித்தளம் வலுவாக அமைக்கப்பட்டால், இந்தியா பொருளாதார ரீதியாக உயர்ந்த சிகரங்களை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

புரா திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி, பல கிராமங்களை இணைக்கும் 30 கி.மீ சுற்றளவு கொண்ட வட்ட சாலையை நிர்மாணிப்பதும், வளாகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஒரே பேருந்து பாதை வழியாக இணைப்பதும் ஆகும். இது நகரங்களின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, புரா கிராம வளாகங்களுக்குள் குடியிருப்பு வசதிகளை உருவாக்கும்.

இதனால் கிராமங்களுக்கு இடையிலான குடியேற்றத்தை அதிகரிப்பதோடு கிராமங்களிலிருந்து சிறுநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதையும் குறைக்கும். இதுபோன்ற ஒரு லட்சிய திட்டத்தை அடைய, ஒவ்வொரு யூனிட்டிற்கும் பொதுத்துறை-தனியார் கூட்டு மாதிரியின் கீழ் சுமார் 7000 புரா வளாகங்களுக்கு ரூ.130 கோடி செலவாகும் என்று கலாம் முன்மொழிந்தார். புரா கிராம வளாகங்களில், நகரங்களுக்கு இணையான உயர்தர வாழ்க்கைத் தரத்தை வழங்க கலாம் நீண்ட காலமாக முயன்று வந்தார்.

மனிதநேய மாதிரி

நானாஜி தேஷ்முக் தன்னிறைவு பெற்ற கிராமங்களின் முழுமையான மனிதாபிமான மாதிரியை முன்மொழிகிறார். தேஷ்முக் இந்த மாதிரியை நாட்டின் 500 கிராமங்களில், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் பகுதியில் செயல்படுத்தியுள்ளார். வேலையின்மை இல்லாத கிராமங்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், உள்ளூரில் சட்ட மோதல்களைத் தீர்ப்பது, விதவை மறுமணம் செய்தல் ஆகியவை இந்த மாதிரியின் ஒருங்கிணைந்த பகுதிகள்.

தேஷ்முக்கின் மாதிரி கிராமங்களை வளாகங்களாக உருவாக்கி சமூக, பொருளாதார மற்றும் கல்வி வசதிகளை உருவாக்க முன்மொழிகிறது. இந்த மாதிரியில் அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் உலகம் முழுவதும் நிலையான விவசாய வளர்ச்சிக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பங்கள் நமது விவசாயிகளுக்கு உலக சந்தையில் பயிர்களின் விலைகளைப் பற்றிய அன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ள உதவுகின்றன. மேலும் வெளிநாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் நவீன விவசாய முறைகள் குறித்த தகவல்களை நமது விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

இது விவசாயிகளுக்கு சிறந்த விளைச்சலையும் அதன் மூலம் அதிக வருமானத்தையும் பெற உதவும். சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நிறுவப்பட்ட 10,000 விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களின் திட்டத்திற்கு ஏற்ப தேஷ்முக் மாதிரி உள்ளது.

காந்தி, கலாம் மற்றும் தேஷ்முக் ஆகியோரின் கிராம அபிவிருத்தி கனவுகளை ஆதரிப்பதற்கு நிதி திரட்டுவதற்காக ‘ஆத்மா-நிர்பார்’ பத்திரங்களை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

வணிக வங்கிகள் வழங்கும் முன்னுரிமை கடன்களில் ஒரு பகுதியை இந்த பத்திரங்களை வாங்குவதற்கு செலவிட வேண்டும். கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நமது இளைஞர்களை மாணவ பருவத்திலிருந்து தயார் செய்ய வேண்டும். பொறியியல், மருத்துவ மற்றும் வணிகப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் அதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இளமை செறிவு கிராம மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

சிறந்த தலைவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நான்கு தொழிலாளர்களில் ஒருவர், தனது கிராமத்திலிருந்து அல்லது சிறுநகரத்திலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி நகரத்திற்குச் சென்றவராக உள்ளார். கரோனா நெருக்கடி, ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வாறு மோசமடைகிறது என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்டெடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அவர்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லை. இது கடலுக்குள் தண்ணீர் ஊற்றுவதைப் போல் இருக்கிறது.

மக்கள் தங்கள் தினசரி உணவை சம்பாதிப்பதற்காக சிறுநகரங்களுக்கும் நகரங்களுக்கும் குடிபெயர்வதில்லை என்ற நிலை வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு பெற்றவையாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மாறும்போது தான் இதை அடைய முடியும். தற்போதைய நெருக்கடியை அதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும்,

மேலும் புதிய வளர்ச்சி மாதிரிகள் அவசரகால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற மாற்று மாதிரிகள் ஏற்கனவே நம்முடைய பல சிறந்த தேசத்தலைவர்களால் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நாட்டுப்பற்றுள்ள தலைவர்களான மகாத்மா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் சோசலிஸ்ட் நானாஜி தேஷ்முக் ஆகியோரால் முன்மொழியப்பட்ட கிராம அபிவிருத்தி மாதிரிகள் எளிதில் பொருந்தக்கூடியவை.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் போது, ​​லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வந்த நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் நகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதைப் பார்த்த பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இதனால், வீடற்ற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரங்களைத் தேடி நகரங்களை நோக்கித் தள்ளுவதை விட, வீடற்ற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர்களிலேயே வாழ்வாதாரத்தை மீண்டும் வழங்குவதன் அவசியத்தை கரோனா தொற்றுநோய் வெளிப்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் சிறந்த வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட உணவிற்காக ஆண்டுதோறும் தொலைதூர இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். நகரங்களில் இதுபோன்ற ஒரு வசதி அமைக்கப்பட்டால் மட்டுமே, காந்திஜியின் கிராம-சுயராஜ்ஜியம் கனவு நனவாகும். கிராமங்களில் வாழும் 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு, தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு, பொருளாதார வசதி மற்றும் சுதந்திரமாக இருக்க தொழில்நுட்பம் ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கும்.

கிராமப்புறங்களில், இதுபோன்ற ஒரு அமைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் அறிவு தளங்களின் (ஜன விக்ன வேதிகா) உதவியுடன் அரசாங்கத்தின் பொதுத்துறை-தனியார் கூட்டு மூலம் அமைக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வருகிறது. வெவ்வேறு மதிப்பீடுகளின்படி, குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 7.2 கோடியிலிருந்து 11 கோடியாக உள்ளது. இந்த மதிப்பீடுகள் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருப்பதில் இந்தியா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

காந்தேய கிராம ஸ்வராஜ்

காந்திஜியின் கிராம சுயராஜியத்தின் எண்ணப்படி, கிராமங்களை பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற வைப்பதே கிராமங்களுக்கான புதிய வளர்ச்சி மாதிரியாகும். தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின்னர், காந்தி சம்பாரன் (1917), சேவகிராம் (1920) மற்றும் வர்தா (1938) போன்ற கிராமப்புற இயக்கங்களுக்கு தலைமை தாங்கினார்.

கிராம மட்டத்தில் ஒரு பரவலாக்கப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்குவதும், உள்கட்டமைப்பைக் உருவாக்கும் போது கிராமவாசிகளுக்கு பொருளாதார தன்னிறைவு மற்றும் சமூக சமத்துவத்தை அடைவதற்கான சூழலை உருவாக்குவதும் முக்கிய நோக்கமாக இருந்தது. உண்மையான ஜனநாயகத்தின் வேர்கள் தன்னிறைவு பெற்ற மற்றும் பொருளாதார மற்றும் சமூக சமமான கிராமங்கள் என்று அழைக்கப்படும் வளமான நிலங்களில் மட்டுமே விரிவடைய முடியும் என்று மகாத்மா வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு கிராமமும் ஒரு தனி குடியரசு அமைப்பாக செயல்படும்போது தான் கிராம சுயராஜ்யம் நிறுவப்பட்டதாகக் கூறலாம். இது ஒரு சுதந்திர தேசமாகும், இது தனது சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் போது அண்டை கிராமங்களுடன் கைகோர்த்து செயல்படுகிறது." என்று காந்தி கூறியுள்ளார்.

ஒவ்வொரு கிராமமும் தன்னம்பிக்கையுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கிராம சுயராஜ்யம் என்பது அந்த கிராம மக்கள் உள்ளூரில் வேலைசெய்து அதிக உற்பத்தித்திறனுடன் அதிக வருமானம் ஈட்டுவதாகும். கிராமப்புற வளர்ச்சிக்கு தொழில்நுட்பமே முக்கியம் என்பதை அவர் அங்கீகரித்தார்.

அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய சர்காவை தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் புதுப்பித்தால் ரூ.1 லட்சம் (தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.2.5 கோடிக்கு சமம்) வெகுமதி அளிப்பதாக அப்போதைய பிரிட்டிஷ் மற்றும் இந்திய செய்தித்தாள்களில் அவர் அறிவித்திருந்தது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், கிராமங்களுக்கு நவீன கால வசதிகள் வழங்கப்படுவதற்கு ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் 50 முதல் 100 கிராமங்கள் சேர்ந்து ஒரு வளாகம் உருவாக்கப்பட்டால், இணைஇருப்பிடம் மற்றும் சந்தைகளை உருவாக்க முடியும் என்றார்.

தொழில்நுட்பம் மூலம் சாலைகள், கட்டிடங்கள், தங்குமிடம், சேமிப்பு வசதிகள், அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து, கிராமவாசிகள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்புகொண்டு தங்களை வளர்த்துக் கொள்ளலாம். இந்த இணைப்புகள் மூலம், கிராமங்கள் மற்றும் நகரங்கள் வளர்ச்சி பாதையில் எளிதாக நடைபோட முடியும். 2004 ஜனவரியில் சண்டிகரில் நடைபெற்ற இந்திய தேசிய அறிவியல் காங்கிரசின் 90ஆவது மாநாட்டில் கலாம் இந்த மாதிரியை வழங்கினார்.

தன்னிறைவு பெற்ற கிராமங்களின் அடித்தளம் வலுவாக அமைக்கப்பட்டால், இந்தியா பொருளாதார ரீதியாக உயர்ந்த சிகரங்களை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

புரா திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி, பல கிராமங்களை இணைக்கும் 30 கி.மீ சுற்றளவு கொண்ட வட்ட சாலையை நிர்மாணிப்பதும், வளாகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் ஒரே பேருந்து பாதை வழியாக இணைப்பதும் ஆகும். இது நகரங்களின் மீதான அழுத்தத்தைக் குறைத்து, புரா கிராம வளாகங்களுக்குள் குடியிருப்பு வசதிகளை உருவாக்கும்.

இதனால் கிராமங்களுக்கு இடையிலான குடியேற்றத்தை அதிகரிப்பதோடு கிராமங்களிலிருந்து சிறுநகரங்கள் மற்றும் நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதையும் குறைக்கும். இதுபோன்ற ஒரு லட்சிய திட்டத்தை அடைய, ஒவ்வொரு யூனிட்டிற்கும் பொதுத்துறை-தனியார் கூட்டு மாதிரியின் கீழ் சுமார் 7000 புரா வளாகங்களுக்கு ரூ.130 கோடி செலவாகும் என்று கலாம் முன்மொழிந்தார். புரா கிராம வளாகங்களில், நகரங்களுக்கு இணையான உயர்தர வாழ்க்கைத் தரத்தை வழங்க கலாம் நீண்ட காலமாக முயன்று வந்தார்.

மனிதநேய மாதிரி

நானாஜி தேஷ்முக் தன்னிறைவு பெற்ற கிராமங்களின் முழுமையான மனிதாபிமான மாதிரியை முன்மொழிகிறார். தேஷ்முக் இந்த மாதிரியை நாட்டின் 500 கிராமங்களில், குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் பகுதியில் செயல்படுத்தியுள்ளார். வேலையின்மை இல்லாத கிராமங்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், உள்ளூரில் சட்ட மோதல்களைத் தீர்ப்பது, விதவை மறுமணம் செய்தல் ஆகியவை இந்த மாதிரியின் ஒருங்கிணைந்த பகுதிகள்.

தேஷ்முக்கின் மாதிரி கிராமங்களை வளாகங்களாக உருவாக்கி சமூக, பொருளாதார மற்றும் கல்வி வசதிகளை உருவாக்க முன்மொழிகிறது. இந்த மாதிரியில் அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் உலகம் முழுவதும் நிலையான விவசாய வளர்ச்சிக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பங்கள் நமது விவசாயிகளுக்கு உலக சந்தையில் பயிர்களின் விலைகளைப் பற்றிய அன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ள உதவுகின்றன. மேலும் வெளிநாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் நவீன விவசாய முறைகள் குறித்த தகவல்களை நமது விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

இது விவசாயிகளுக்கு சிறந்த விளைச்சலையும் அதன் மூலம் அதிக வருமானத்தையும் பெற உதவும். சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நிறுவப்பட்ட 10,000 விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களின் திட்டத்திற்கு ஏற்ப தேஷ்முக் மாதிரி உள்ளது.

காந்தி, கலாம் மற்றும் தேஷ்முக் ஆகியோரின் கிராம அபிவிருத்தி கனவுகளை ஆதரிப்பதற்கு நிதி திரட்டுவதற்காக ‘ஆத்மா-நிர்பார்’ பத்திரங்களை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

வணிக வங்கிகள் வழங்கும் முன்னுரிமை கடன்களில் ஒரு பகுதியை இந்த பத்திரங்களை வாங்குவதற்கு செலவிட வேண்டும். கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள நமது இளைஞர்களை மாணவ பருவத்திலிருந்து தயார் செய்ய வேண்டும். பொறியியல், மருத்துவ மற்றும் வணிகப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் அதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இளமை செறிவு கிராம மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

சிறந்த தலைவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நான்கு தொழிலாளர்களில் ஒருவர், தனது கிராமத்திலிருந்து அல்லது சிறுநகரத்திலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி நகரத்திற்குச் சென்றவராக உள்ளார். கரோனா நெருக்கடி, ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வாறு மோசமடைகிறது என்பதை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்டெடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அவர்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லை. இது கடலுக்குள் தண்ணீர் ஊற்றுவதைப் போல் இருக்கிறது.

மக்கள் தங்கள் தினசரி உணவை சம்பாதிப்பதற்காக சிறுநகரங்களுக்கும் நகரங்களுக்கும் குடிபெயர்வதில்லை என்ற நிலை வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு பெற்றவையாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மாறும்போது தான் இதை அடைய முடியும். தற்போதைய நெருக்கடியை அதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும்,

மேலும் புதிய வளர்ச்சி மாதிரிகள் அவசரகால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். அதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற மாற்று மாதிரிகள் ஏற்கனவே நம்முடைய பல சிறந்த தேசத்தலைவர்களால் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நாட்டுப்பற்றுள்ள தலைவர்களான மகாத்மா காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் சோசலிஸ்ட் நானாஜி தேஷ்முக் ஆகியோரால் முன்மொழியப்பட்ட கிராம அபிவிருத்தி மாதிரிகள் எளிதில் பொருந்தக்கூடியவை.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி : மருத்துவ நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.