தேசிய தலைநகர் டெல்லியில், நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதையடுத்து காற்று மாசு மிகவும் மோசமடைந்தது. ஒரு புறம் கரோனா பெருந்தொற்று அதிகரிப்பதால், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.
மார்பக தொற்று ஏற்படாதவாறு காற்று மாசுவை தவிர்க்கும் நோக்கில் டெல்லிக்கு வெளியே சிறிது காலம் தங்கியிருக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, சென்னை அல்லது கோவாவில் சோனியா காந்தி தங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோவாவில் உள்ள தபோலிம் சர்வதேச விமான நிலையத்திற்கு சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியுடன் வந்தடைந்தார். அடுத்த ஒரு சில நாள்களுக்கு அவர் கோவாவில் தங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, சர் கங்கா ராம் மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து, அவரை வீட்டிலேயே மருத்துவர்கள் கண்காணித்துவந்தனர்.