ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் எனக் கூறி அப்பாவிகள் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 30, 2020, 10:05 PM IST

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேர் குற்றமற்றவர்கள் எனக்கூறி அவர்களது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லாவேபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று (டிசம்பர் 29) மாலை நடத்திய என்கவுன்ட்டரில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என அவர்களது பெற்றோர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூறுகையில், "லாவேபோரா பகுதியிலுள்ள நூரா மருத்துவமனைக்கு எதிராக உள்ள கட்டடத்தில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் அவர்களை சுட்டுக்கொன்றோம். மேலும் அவர்கள் ஸ்ரீநகரின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்" என்றார்.

இறந்தவர்களை அடையாளம் காணுவதற்காக அவர்களது பெற்றோர், உறவினர்கள் அழைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த அஜாஸ் காணி, அத்தர் முஸ்தப்பா வானி ஆகியோர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சபேர் அகமது லோன் என்பவர் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது பெற்றோர் தங்களது மகன்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் எனக்கூறி காவல் துறையினரிடம் முறையிட்டனர்.

அப்போது பேசிய அஜாஸின் உறவினர் ஒருவர், "பல்கலைகழகத்திற்கு செல்வதாக கூறி அஜாஸ் வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டார். ஸ்ரீநகரில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இன்று மதியம் அஜாஸ் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவன் குற்றமற்றவன். இது வரை அவன் மீது எந்த வழக்கும், புகாரும் கிடையாது" என்றார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் பெற்றோர், தங்களது மகன்களை பாதுகாப்பு படையினர் கொன்றுவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்க 9 நாடுகள் விருப்பம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லாவேபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று (டிசம்பர் 29) மாலை நடத்திய என்கவுன்ட்டரில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் பயங்கரவாதிகள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என அவர்களது பெற்றோர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூறுகையில், "லாவேபோரா பகுதியிலுள்ள நூரா மருத்துவமனைக்கு எதிராக உள்ள கட்டடத்தில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் அவர்களை சுட்டுக்கொன்றோம். மேலும் அவர்கள் ஸ்ரீநகரின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்" என்றார்.

இறந்தவர்களை அடையாளம் காணுவதற்காக அவர்களது பெற்றோர், உறவினர்கள் அழைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த அஜாஸ் காணி, அத்தர் முஸ்தப்பா வானி ஆகியோர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சபேர் அகமது லோன் என்பவர் ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது பெற்றோர் தங்களது மகன்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் எனக்கூறி காவல் துறையினரிடம் முறையிட்டனர்.

அப்போது பேசிய அஜாஸின் உறவினர் ஒருவர், "பல்கலைகழகத்திற்கு செல்வதாக கூறி அஜாஸ் வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் 3 மணி அளவில் புறப்பட்டார். ஸ்ரீநகரில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இன்று மதியம் அஜாஸ் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவன் குற்றமற்றவன். இது வரை அவன் மீது எந்த வழக்கும், புகாரும் கிடையாது" என்றார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் பெற்றோர், தங்களது மகன்களை பாதுகாப்பு படையினர் கொன்றுவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்க 9 நாடுகள் விருப்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.