ETV Bharat / bharat

கொல்கத்தாவில் மூன்று மருத்துவர்களுக்கு கரோனா!

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிக்கு சிகிச்சையளித்த மூன்று மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 20, 2020, 12:05 PM IST

Kolkata Medical College
Kolkata Medical College

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் வைரஸ் தொற்றால் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மேற்கு வங்க தலைநகரிலுள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மூன்று மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கிருந்த இரண்டு நோயாளிகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 62 வயது மதிக்கத்தக்க நபர் கிட்னி தொடர்பான பிரச்னை காரணமாக சார்னோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சார்னோக் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து இவர் கொல்கத்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவர் மூலம் மூன்று மருத்துவர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கோவிட்-19 தொற்று பரவியுள்ளது.

முன்னதாக, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றுடைய நபருடன் தொடர்பிலிருந்ததால் எட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்: அமித் ஷா!

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் வைரஸ் தொற்றால் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மேற்கு வங்க தலைநகரிலுள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மூன்று மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கிருந்த இரண்டு நோயாளிகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த 62 வயது மதிக்கத்தக்க நபர் கிட்னி தொடர்பான பிரச்னை காரணமாக சார்னோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சார்னோக் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து இவர் கொல்கத்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவர் மூலம் மூன்று மருத்துவர்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கோவிட்-19 தொற்று பரவியுள்ளது.

முன்னதாக, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றுடைய நபருடன் தொடர்பிலிருந்ததால் எட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்: அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.