கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று, தற்போது சீனாவைத் தாண்டி இத்தாலி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை 84 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இருவர் கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 71 வயது மதிக்கதக்க நபர் இன்று (மார்ச் 14) உயிரிழந்துள்ளார். அவர் பிப்ரவரி 25ஆம் தேதி ஹஜ் புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், "கோவிட் 19 தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர், இன்று மாலை 4.20க்கு திடீரென்று உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே, அவர் கோவிட் 19 வைராஸ் காரணமாக உயிரிழந்தாரா, இல்லையா என்பது தெரியவரும் " என்றனர்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: பிகாரில் 144 தடை உத்தரவு