ETV Bharat / bharat

செளரவ் கங்குலி இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவார் - மருத்துவர்கள் தகவல்

author img

By

Published : Jan 5, 2021, 6:43 PM IST

மாரடைப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி விரைவில் தனது இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்த குழாயினை விரிவுப்படுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், 20 வயது இளைஞர் போல அவரது இதயம் வலுவாக இருப்பதாகவும், அவரை பரிசோதித்த இதய நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "இந்த லேசான மாரடைப்பால் அவரது இதயத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விரைவில் அவர் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார். அவரது முடிவைப் பொறுத்தே, மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்போது அவருக்கு நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ இல்லை. 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு வர அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

நாளை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி (43) கடந்த இரண்டாம் தேதி நெஞ்சுவலி காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், இதயத்தின் ரத்த குழாயினை விரிவுப்படுத்துவற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், 20 வயது இளைஞர் போல அவரது இதயம் வலுவாக இருப்பதாகவும், அவரை பரிசோதித்த இதய நோய் சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "இந்த லேசான மாரடைப்பால் அவரது இதயத்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. விரைவில் அவர் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார். அவரது முடிவைப் பொறுத்தே, மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்போது அவருக்கு நெஞ்சு வலியோ, மூச்சுத்திணறலோ இல்லை. 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு வர அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

நாளை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கங்குலி நாளை டிஸ்சார்ஜ் - மருத்துவமனை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.