ETV Bharat / bharat

போலி மசாஜ் சென்டர்: தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த இருவர் கைது!

author img

By

Published : Dec 13, 2019, 8:42 AM IST

புதுச்சேரி: மசாஜ் சென்டர் பெயரில் தொழிலதிபரை உதைத்து ரூ.5 லட்சம் பறித்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மசாஜ் சென்டர் பெயரில் 5 லட்சம் ரூபாய் பறிப்பு
மசாஜ் சென்டர் பெயரில் 5 லட்சம் ரூபாய் பறிப்பு

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 63). தொழிலதிபரான இவருக்கும் ஈசிஆர் சாலையில் மசாஜ் சென்டர் நடத்திவரும் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் அண்மையில் முதலியார்பேட்டை பகுதியில் புதிதாக மசாஜ் சென்டர் திறந்திருப்பதாக மஞ்சுநாத்க்கு அழைப்புவிடுத்துள்ளார். இதையடுத்து, மஞ்சுநாத் அங்கு சென்று பார்த்தபோது வாடகைக்கு எடுத்த ஒரு வீட்டில் அறிவிப்பு பலகை எதுமில்லாமல் இருந்துள்ளது.

பின்னர் வீட்டின் உள்ளே சென்ற மஞ்சுநாத்தை, ராஜேஷ் அவரது நண்பருடன் சேர்ந்து அடித்துள்ளார். மேலும், மஞ்சுநாத்தின் செல்போன், உடமைகளை பறித்த அவர்கள் அதிலிருந்த வங்கியின் ஆப் மூலம் 5 லட்ச ரூபாயை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் மஞ்சுநாத் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ், அவரது நண்பரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

புதுச்சேரி திருமுடி சேதுராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 63). தொழிலதிபரான இவருக்கும் ஈசிஆர் சாலையில் மசாஜ் சென்டர் நடத்திவரும் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் அண்மையில் முதலியார்பேட்டை பகுதியில் புதிதாக மசாஜ் சென்டர் திறந்திருப்பதாக மஞ்சுநாத்க்கு அழைப்புவிடுத்துள்ளார். இதையடுத்து, மஞ்சுநாத் அங்கு சென்று பார்த்தபோது வாடகைக்கு எடுத்த ஒரு வீட்டில் அறிவிப்பு பலகை எதுமில்லாமல் இருந்துள்ளது.

பின்னர் வீட்டின் உள்ளே சென்ற மஞ்சுநாத்தை, ராஜேஷ் அவரது நண்பருடன் சேர்ந்து அடித்துள்ளார். மேலும், மஞ்சுநாத்தின் செல்போன், உடமைகளை பறித்த அவர்கள் அதிலிருந்த வங்கியின் ஆப் மூலம் 5 லட்ச ரூபாயை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் மஞ்சுநாத் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ், அவரது நண்பரை காவல் துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: பூஜை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு!

Intro:மசாஜ் சென்டர் பெயரில் தொழிலதிபரை உதைத்து 5 லட்சம் ரூபாய் பறித்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..
Body:மசாஜ் சென்டர் பெயரில் தொழிலதிபரை உதைத்து 5 லட்சம் ரூபாய் பறித்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..



புதுச்சேரி
திருமுடி சேதுராமன் நகர் சேர்ந்தவர் மஞ்சுநாத் (63 வயது). தொழிலதிபர். இவருக்கு ஈசிஆர் சாலையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் ராஜேஷ்வுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ராஜேஷ் அண்மையில் முதலியார்பேட்டை பகுதியில் புதிதாக மசாஜ் சென்டர் தொடர்பிருப்பதாக அழைப்புவிடுத்தார். அங்கு சென்று பார்த்த போது வாடைகைக்கு எடுத்த ஒரு வீட்டில் அறிவிப்பு பலகை எதுமில்லை. உள்ளே சென்ற மஞ்சுநாத்தை ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் அடித்து உதைத்து செல்போன் மற்றும் உடமைகளை பிடுங்கினார்கள். அவரது செல்போனில் உள்ள வங்கியின் ஆப் மூலம் 5 லட்ச ரூபாயை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்கள்.

இதுதொடர்பாக அவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..Conclusion:மசாஜ் சென்டர் பெயரில் தொழிலதிபரை உதைத்து 5 லட்சம் ரூபாய் பறித்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.