ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: உதவி எண் அறிவித்த மத்திய அரசு!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு உதவி வாட்ஸ் அப் எண்ணை அறிவித்துள்ளது.

author img

By

Published : Mar 20, 2020, 1:39 PM IST

கரோனா உதவி எண் அறிவிப்பு!
கரோனா உதவி எண் அறிவிப்பு!

சீனாவில் இருந்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கோவிட்-19 வைரஸால் இந்தியாவில் ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தியாவில் 206 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான பீதி மக்களிடையே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் கோவிட்- 19 தொற்று வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் கோவிட்- 19 வைரஸ் குறித்து மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மத்திய அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெரிந்துகொள்ள 9013151515 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்துகொள்ளலாம்.

இதுதவிர (ncov2019@gov.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி மக்கள் தங்களுக்கான சந்தேங்களை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: இலங்கை மக்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு

சீனாவில் இருந்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கோவிட்-19 வைரஸால் இந்தியாவில் ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தியாவில் 206 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பான பீதி மக்களிடையே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் கோவிட்- 19 தொற்று வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் கோவிட்- 19 வைரஸ் குறித்து மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மத்திய அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெரிந்துகொள்ள 9013151515 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்துகொள்ளலாம்.

இதுதவிர (ncov2019@gov.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி மக்கள் தங்களுக்கான சந்தேங்களை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: இலங்கை மக்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.