ETV Bharat / bharat

அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - புதுச்சேரி முதலமைச்சர் - புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம்

புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம்
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம்
author img

By

Published : Apr 7, 2020, 1:56 PM IST

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தேவையில்லாமல் கடைகளில் கூட்டம் கூடுவதாகவும், வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பல வர்த்தக நிறுவனங்கள் இதனை கடைப்பிடிக்க தவறியது மேலும் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலர் அஸ்வின் குமார், குடிமைப்பொருள் செயலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம்

இக்கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு மாதத்திற்கு இருப்பு வைக்குமாறும், பொதுமக்களுக்கு அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தேவையில்லாமல் கடைகளில் கூட்டம் கூடுவதாகவும், வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பல வர்த்தக நிறுவனங்கள் இதனை கடைப்பிடிக்க தவறியது மேலும் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலர் அஸ்வின் குமார், குடிமைப்பொருள் செயலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம்

இக்கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு மாதத்திற்கு இருப்பு வைக்குமாறும், பொதுமக்களுக்கு அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.