புதுச்சேரி புராணம் குப்பத்தில் செயல்பட்டு வரும் சிலம்பம் சத்திரிய பயிற்சிப் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கர்லாக்கட்டை விளையாட்டை, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த கர்லாக்கட்டை விளையாட்டை இன்றைய சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் கற்றுக்கொள்ளவும் முயன்று வருகின்றனர்.
இதற்காக உலக சாதனை முயற்சி திட்டமிடப்பட்டு, அதில் இப்பயிற்சி பள்ளியைச் சேர்ந்தோர் கடந்த நான்கு மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உலக கர்லாக்கட்டை தினமான டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோன்று இந்த நாளில் உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 'அசிஸ்ட் வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு' சார்பில் சாதனை முயற்சி இன்று நடைபெற்றது.
அசிஸ்ட் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் செயலாளர் ராஜேந்திரன் குழுவினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் செந்தில் கண்ணன் 12 கிலோ எடையுள்ள 5 அடி உயரம் கொண்ட மாஞ்சா கர்லாக்கட்டையை 17 நிமிடம் 23 விநாடிகளில், 603 முறை சுற்றி உலக சாதனைப் படைத்தார். மாணவி வித்தியா கதாயுத சுற்றி மூலம் அரை மணிநேரத்தில் 925 முறை சுற்றி, சாதனைப் படைத்தார் .
பார்த்திபன் மேல் வராக சுற்றுப் பிரிவில் அரை மணி நேரத்தில் 1, 073 சுற்று சுற்றி, சாதனைப் படைத்தார்.
இதையும் படிங்க: 'புலி நடமாட்டம்?' - நாகர்கோவிலில் பரபரப்பு!