ETV Bharat / bharat

பிகார் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு விரைவில் உறுதி? - பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்

பிகாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு செப்டம்பர் 15ஆம் தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NDA
NDA
author img

By

Published : Sep 10, 2020, 4:10 AM IST

பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள 243 தொகுதிகளில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

அங்கு, மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதசார்பற்ற ஜனதாதளம் பாஜக, லோக் ஜனசக்தி, ஆர்.எல்.எஸ்.பி., ஜிதின்ராம் மஞ்சியின் எஃச்.ஏ.எம். ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுக்கான இறுதிப் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 15ஆம் தேதி பிகார் வரவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணியில் முன்னணிக் கட்சிகளான மதசார்பற்ற ஜனதாதளம், பாஜக 100-110 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிகார் தலித் வாக்குகள் யாருக்கு?

பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்குள்ள 243 தொகுதிகளில் போட்டியிட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

அங்கு, மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதசார்பற்ற ஜனதாதளம் பாஜக, லோக் ஜனசக்தி, ஆர்.எல்.எஸ்.பி., ஜிதின்ராம் மஞ்சியின் எஃச்.ஏ.எம். ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுக்கான இறுதிப் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 15ஆம் தேதி பிகார் வரவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

கூட்டணியில் முன்னணிக் கட்சிகளான மதசார்பற்ற ஜனதாதளம், பாஜக 100-110 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிகார் தலித் வாக்குகள் யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.