ETV Bharat / bharat

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் கொலை

author img

By

Published : Sep 9, 2020, 3:50 PM IST

கன்னூர்: கேரளாவில் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சலாவுதீன் அடையாளம் தெரியாத கும்பலால் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sdpi-worker-hacked-to-death-in-kannur-district-of-kerala
sdpi-worker-hacked-to-death-in-kannur-district-of-kerala

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சியாமபிரசாத் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சலாவுதீன் என்பவர் ஏழாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதனால் சியாமபிரசாத் கொலையான ஒரு வருடத்திற்கும் மேலாக சலாவுதீன் தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் காவல் துறையினரிடம் சலாவுதீன் சரணடைந்தார்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னதாக சலாவுதீன் சிறையிலிருந்து வெளிவந்திருந்த நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை வழிமறித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சலாவுதீனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் கழுத்தில் படுகாயமடைந்த சலாவுதீன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சலாவுதீன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தக் கொலை தொடர்பாக மாவட்டக் காவல் துறை தலைவர் யத்தீஷ் சந்த்ரா தலைமையிலான காவலர்கள் கன்னூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஜிபிஎஸ் ட்ராக்கிங், சாவி ஸ்கேனிங்' ஹாலிவுட் திரைப்பட பாணியில் கார்களைத் திருடிய ஹைடெக் நபர் கைது!

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சியாமபிரசாத் அடையாளம் தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சலாவுதீன் என்பவர் ஏழாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதனால் சியாமபிரசாத் கொலையான ஒரு வருடத்திற்கும் மேலாக சலாவுதீன் தலைமறைவாக இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் காவல் துறையினரிடம் சலாவுதீன் சரணடைந்தார்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னதாக சலாவுதீன் சிறையிலிருந்து வெளிவந்திருந்த நிலையில், நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை வழிமறித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சலாவுதீனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் கழுத்தில் படுகாயமடைந்த சலாவுதீன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சலாவுதீன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தக் கொலை தொடர்பாக மாவட்டக் காவல் துறை தலைவர் யத்தீஷ் சந்த்ரா தலைமையிலான காவலர்கள் கன்னூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஜிபிஎஸ் ட்ராக்கிங், சாவி ஸ்கேனிங்' ஹாலிவுட் திரைப்பட பாணியில் கார்களைத் திருடிய ஹைடெக் நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.