ETV Bharat / bharat

1984 சீக்கியர் படுகொலை: குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு பிணை மறுப்பு!

author img

By

Published : Sep 4, 2020, 9:14 PM IST

Updated : Sep 4, 2020, 10:02 PM IST

1984ஆம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமாரின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Sajjan Kumar life imprisonment 1984 anti-Sikh riots case 1984 anti-Sikh riots 1984 சீக்கியர் படுகொலை பிணை மறுப்பு சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றம் காங்கிரஸ்
Sajjan Kumar life imprisonment 1984 anti-Sikh riots case 1984 anti-Sikh riots 1984 சீக்கியர் படுகொலை பிணை மறுப்பு சஜ்ஜன் குமார் உச்ச நீதிமன்றம் காங்கிரஸ்

டெல்லி: 1984 சீக்கிய கலவர வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கபெற்றவர் சஜ்ஜன் குமார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி பிணைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் போது சஜ்ஜன் குமாருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் சிங், “குமார் 20 மாதங்களாக தொடர்ந்து சிறையில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட அவர் 16 கிலோ குறைந்துவிட்டார். அவரது உடல்நிலை வேறு மோசமாக உள்ளது. ஆகையால் அவருக்கு பிணை வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

இதற்கு எதிர்தரப்பு வழக்குரைஞர் ஹெச்.எஸ். போல்கா எதிர்ப்பு தெரிவித்தார். குமார் நலமுடன் உள்ளார் என்று கூறிய அவர் அவருக்கு தேவைப்பட்டால் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஜ்ஜன் குமாருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார். 1984ஆம் ஆண்டு ஆக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்நிலையில், ராஜ் நகர் பகுதியில் உள்ள குருத்வாராவில் நடந்த கலவரத்தில் ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: நவாஸ் கனியை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்' - ஹெச்.ராஜா

டெல்லி: 1984 சீக்கிய கலவர வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கபெற்றவர் சஜ்ஜன் குமார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி பிணைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் போது சஜ்ஜன் குமாருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் சிங், “குமார் 20 மாதங்களாக தொடர்ந்து சிறையில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட அவர் 16 கிலோ குறைந்துவிட்டார். அவரது உடல்நிலை வேறு மோசமாக உள்ளது. ஆகையால் அவருக்கு பிணை வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.

இதற்கு எதிர்தரப்பு வழக்குரைஞர் ஹெச்.எஸ். போல்கா எதிர்ப்பு தெரிவித்தார். குமார் நலமுடன் உள்ளார் என்று கூறிய அவர் அவருக்கு தேவைப்பட்டால் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஜ்ஜன் குமாருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார். 1984ஆம் ஆண்டு ஆக்டோபர் 31ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்நிலையில், ராஜ் நகர் பகுதியில் உள்ள குருத்வாராவில் நடந்த கலவரத்தில் ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: நவாஸ் கனியை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்' - ஹெச்.ராஜா

Last Updated : Sep 4, 2020, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.