ETV Bharat / bharat

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு; கீழ் நீதிமன்றத்தில் முறையிட சிபிஐக்கு உத்தரவு! - ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கீழ் நீதிமன்றத்தை அனுக சிபிஐக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம்
author img

By

Published : Sep 2, 2019, 5:00 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரையும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை, சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்தது. முதலில் ஐந்து நாட்கள், பிறகு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து சிதம்பரத்தை விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மீண்டும் சிபிஐ காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், ப.சிதம்பரத்தின் வயதை காரணம் காட்டி நீதிமன்றக் காவலில் வைக்காமல் வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்க அவர் தரப்பு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க தடைவிதித்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க கீழ் நீதிமன்றத்தை அனுகும்படி உச்ச நீதிமன்றம், சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரையும், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் பெயரையும் சிபிஐ சேர்த்தது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை, சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்தது. முதலில் ஐந்து நாட்கள், பிறகு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து சிதம்பரத்தை விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மீண்டும் சிபிஐ காவல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், ப.சிதம்பரத்தின் வயதை காரணம் காட்டி நீதிமன்றக் காவலில் வைக்காமல் வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்க அவர் தரப்பு வாதிட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க தடைவிதித்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க கீழ் நீதிமன்றத்தை அனுகும்படி உச்ச நீதிமன்றம், சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

Intro:Body:

Chidambaram Case Update


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.