ETV Bharat / bharat

விகாஸ் துபே என்கவுன்ட்டர் : விசாரணைக் குழுவில் மாற்றம் கோரிய மனு தள்ளுபடி

author img

By

Published : Aug 19, 2020, 6:04 PM IST

டெல்லி : விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கின் விசாரணைக் குழுவில் மாற்றத்தை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் நோக்கில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்களுடன் சவுகான் தொடர்பில் இருக்கும் காரணத்தால் குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் எனக் கோரி கன்ஷ்யம் உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உபாத்யாயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாப்டே கூறுகையில், "அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கமாக உள்ள நீதிபதிகள் அனைவரையும் ஒரு சார்பு உடையவர்கள் எனக் கூற முடியுமா?" என்றார்.

உபாத்யாய் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை குழுவில் சேர்த்து விசாரணைக் குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. செய்திகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தேகிக்க முடியாது என ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்திருந்தது.

சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார், அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துகொண்டுள்ளார் எனவும் உபாத்யாய் மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விகாஸ் துபே என்கவுன்ட்டர்: விசாரணை குழுவில் அதிரடி மாற்றம்?

விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் நோக்கில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்களுடன் சவுகான் தொடர்பில் இருக்கும் காரணத்தால் குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் எனக் கோரி கன்ஷ்யம் உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உபாத்யாயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாப்டே கூறுகையில், "அரசியல் பிரமுகர்களுடன் நெருக்கமாக உள்ள நீதிபதிகள் அனைவரையும் ஒரு சார்பு உடையவர்கள் எனக் கூற முடியுமா?" என்றார்.

உபாத்யாய் மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை குழுவில் சேர்த்து விசாரணைக் குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. செய்திகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தேகிக்க முடியாது என ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்திருந்தது.

சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார், அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துகொண்டுள்ளார் எனவும் உபாத்யாய் மனுவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விகாஸ் துபே என்கவுன்ட்டர்: விசாரணை குழுவில் அதிரடி மாற்றம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.