புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் காவலரைத் தாக்கிய ரவுடியை அதிரடிப்படை காவல் துறையினர் தேடிவந்தனர். இதனையடுத்து ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அப்போது, காவலர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப், அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஓடி மறைய முயற்சித்துள்ளார். அப்போது ரவுடியின் கை, கால் முறிந்துள்ளது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரின் கை, கால்கள் உடைபடுவது சமீபத்திய ட்ரெண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடல்பசுவை கடத்திய 4 பேர் கைது