ETV Bharat / bharat

புத்தாண்டு பணியின் போது விபத்தில் சிக்கிய காவலர் - இழப்பீடுகோரி உறவினர்கள் கோரிக்கை!

author img

By

Published : Jan 23, 2020, 1:27 PM IST

புதுச்சேரி: புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கிய தலைமைக் காவலரின் சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Relatives demanding compensation
Relatives demanding compensation

புதுச்சேரி மாநிலம், பீமநகர் ஓடைவீதி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் சுப்பிரமணியன். இவர் கடந்த 31ஆம் தேதி புத்தாண்டு பாதுகாப்புப் பணிக்காக அரியாங்குப்பம் மாதா கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு வண்டியில் 3 இளைஞர்கள் குடிபோதையில் வந்து ஏட்டு சுப்பிரமணியத்தின் மீது மோதியதில், தலையில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த விபத்தில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது மனைவி சுமித்ரா, சகோதரர் நேரு ஆகியோர் புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'பணியின்போது படுகாயமடைந்த சுப்பிரமணியத்திற்கு, இதுவரை 15 லட்சம் செலவாகிவுள்ளது. மேலும் பல லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பணியின்போது படுகாயம் அடைந்த அவருக்கு புதுவை அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை. உயர் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க கூடவில்லை ' எனவும் வேதனைத் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் கோரிக்கை

தொடர்ந்து, 'தமிழ்நாட்டில் பணியின் போது இறக்கும் மற்றும் காயம் அடையும் காவலர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. ஆனால், புதுவை அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. அதனால் அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் வேறுவழியின்றி குடும்பத்துடன் சட்ட சபை வந்து போராட்டம் நடத்துவோம்' என வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்

புதுச்சேரி மாநிலம், பீமநகர் ஓடைவீதி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் சுப்பிரமணியன். இவர் கடந்த 31ஆம் தேதி புத்தாண்டு பாதுகாப்புப் பணிக்காக அரியாங்குப்பம் மாதா கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு வண்டியில் 3 இளைஞர்கள் குடிபோதையில் வந்து ஏட்டு சுப்பிரமணியத்தின் மீது மோதியதில், தலையில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த விபத்தில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது மனைவி சுமித்ரா, சகோதரர் நேரு ஆகியோர் புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'பணியின்போது படுகாயமடைந்த சுப்பிரமணியத்திற்கு, இதுவரை 15 லட்சம் செலவாகிவுள்ளது. மேலும் பல லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பணியின்போது படுகாயம் அடைந்த அவருக்கு புதுவை அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை. உயர் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க கூடவில்லை ' எனவும் வேதனைத் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் கோரிக்கை

தொடர்ந்து, 'தமிழ்நாட்டில் பணியின் போது இறக்கும் மற்றும் காயம் அடையும் காவலர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. ஆனால், புதுவை அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. அதனால் அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் வேறுவழியின்றி குடும்பத்துடன் சட்ட சபை வந்து போராட்டம் நடத்துவோம்' என வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்

Intro:புதுவையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று உள்ள போலீஸ் ஏட்டு குடும்ப சிகிச்சையின் இழப்பீடு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்


Body:புதுச்சேரி பீமநகர் ஓடை வீதி சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும் ஒரு மகள் மகன் உள்ளனர் சுப்பிரமணியன் கடந்த 31ஆம் தேதி புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக அரியாங்குப்பம் மாதா கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்

அப்பொழுது ஒரு வண்டியில் 3 வாலிபர்கள் குடிபோதையில் வந்து ஏட்டு சுப்பிரமணியத்தின் மீது மோதினர் இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கோமா நிலையில் சென்றுள்ள சுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் அவரது மனைவி சுமித்ரா சகோதரர் நேரு ஆகியோர் புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள் பணியின்போது படுகாயமடைந்த ஏட்டுசுப்பிரமணியனுக்கு இதுவரை 15 லட்சம் செலவாகி உள்ளது மேலும் பல லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

பணியின்போது படுகாயம் அடைந்த அவருக்கு புதுவை அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை துறை அமைச்சர் உயர் அதிகாரிகள் யாரும் ஏட்டு சுப்பிரமணியனை வந்து பார்க்கவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது தமிழகத்தில் பணியின் போது இறக்கும் மற்றும் காயம் அடையும் காவலர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க படுகிறது ஆனால் புதுவை அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது மருத்துவமனைக்கு இன்னும் ஏழு லட்சம் கட்ட வேண்டி உள்ளது இதற்கு நிதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க விட்டால் வேறுவழியின்றி குடும்பத்துடன் சட்டசபை வந்து போராட்டம் நடத்துவோம் எனவே அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்


Conclusion:புதுவையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று உள்ள போலீஸ் ஏட்டு குடும்ப சிகிச்சையின் இழப்பீடு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.