ETV Bharat / bharat

பாட்னா சாகிப் தொகுதி எனக்குதான்! வெற்றிக்கொடி நாட்டிய ரவி சங்கர் பிரசாத்

author img

By

Published : May 23, 2019, 5:33 PM IST

பாட்னா: பிகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

ரவி சங்கர் பிரசாத்

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 177 தொகுதிகளில் முன்னிலையிலும், 166 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். கடந்த இருமுறை இத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றிபெற்ற சத்ருகன் சின்காவை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 114 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து சத்ருகன் சின்ஹா சமீபத்தில் விலகி, காங்கிரசில் இணைந்தார்.

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 177 தொகுதிகளில் முன்னிலையிலும், 166 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிகார் மாநிலம் பாட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். கடந்த இருமுறை இத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றிபெற்ற சத்ருகன் சின்காவை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 114 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரவி சங்கர் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து சத்ருகன் சின்ஹா சமீபத்தில் விலகி, காங்கிரசில் இணைந்தார்.

Intro:Body:

dummy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.