ETV Bharat / bharat

21 வயதில் நீதிபதியான இளைஞர் - பிரத்யேகப் பேட்டி! - நாட்டின் முதல் இளவயது நீதிபதி

ஜெய்ப்பூர் : 21 வயது இளைஞர் ஒருவர் நீதிபதியாக உயர்ந்துள்ளார். நாட்டின் முதல் இளவயது நீதிபதியான அந்த இளைஞரை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பிரத்யேகமாகப் பேட்டி கண்டார்.

Raj: 21-year-old set to become India's youngest judge
author img

By

Published : Nov 22, 2019, 10:26 PM IST

இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மயங் பிரதாப் சிங் (Mayank Pratap Singh). இவர்தான் அந்த அசாத்திய சாதனைக்கு சொந்தக்காரர். 21 வயது பூர்த்தியடைந்த நிலையில், நாட்டின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு நீதிபதி தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவரை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டார். அப்போது பிரதாப் சிங் கூறியதாவது, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 2014ஆம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். இந்த ஆண்டுதான் எனது சட்டப்படிப்பு நிறைவடைந்தது. நீதிபதி தேர்வில் முதல் முறையிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக எனது ஆசிரியர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயத்தில் நீதிபதிகளுக்கு கிடைக்கும் மரியாதை, சமூக பொறுப்பு ஆகியவற்றால் நான் நீதித்துறை நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நீதிபதிகளின் வயது 23 ஆண்டுகளில் இருந்து இந்தாண்டு 21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதாப் சிங், இது நல்ல நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்தார்.

21 வயதில் நீதிபதியாக உயர்ந்த இளைஞர் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி
மேலும் அவர், “நீதிபதி தேர்வெழுத குறைந்தப்பட்ச வயது குறைக்கப்பட்டதால்தான், என்னால் தேர்வெழுத முடிந்தது. இல்லாவிட்டால் நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன். இது எனக்கு பயனளித்துள்ளது. அதுமட்டுமல்ல நான் நிறைய கற்றுக்கொள்ளவும், பணிசெய்யவும் எனக்கு வாய்ப்பளிக்கும் என்று நினைக்கிறேன். நான் நிறைய மக்களை சந்திப்பேன். ஏனெனில் நான் சிறிய வயதிலேயே நீதிபதியாகி விட்டேன். இதுமட்டுமின்றி காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பவும், வழக்குகளை தாமதமின்றி முடிக்கவும் இது உதவும்.” என்றார்.

இதையும் படிங்க: அரசு இல்லத்தை மூன்றே நாட்களில் காலி செய்த ரஞ்சன் கோகாய்

இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மயங் பிரதாப் சிங் (Mayank Pratap Singh). இவர்தான் அந்த அசாத்திய சாதனைக்கு சொந்தக்காரர். 21 வயது பூர்த்தியடைந்த நிலையில், நாட்டின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு நீதிபதி தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவரை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் நேரடியாக சந்தித்து பேட்டி கண்டார். அப்போது பிரதாப் சிங் கூறியதாவது, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 2014ஆம் ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். இந்த ஆண்டுதான் எனது சட்டப்படிப்பு நிறைவடைந்தது. நீதிபதி தேர்வில் முதல் முறையிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக எனது ஆசிரியர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனக்கு ஆதரவளித்தோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயத்தில் நீதிபதிகளுக்கு கிடைக்கும் மரியாதை, சமூக பொறுப்பு ஆகியவற்றால் நான் நீதித்துறை நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நீதிபதிகளின் வயது 23 ஆண்டுகளில் இருந்து இந்தாண்டு 21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதாப் சிங், இது நல்ல நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்தார்.

21 வயதில் நீதிபதியாக உயர்ந்த இளைஞர் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி
மேலும் அவர், “நீதிபதி தேர்வெழுத குறைந்தப்பட்ச வயது குறைக்கப்பட்டதால்தான், என்னால் தேர்வெழுத முடிந்தது. இல்லாவிட்டால் நான் தகுதி பெற்றிருக்க மாட்டேன். இது எனக்கு பயனளித்துள்ளது. அதுமட்டுமல்ல நான் நிறைய கற்றுக்கொள்ளவும், பணிசெய்யவும் எனக்கு வாய்ப்பளிக்கும் என்று நினைக்கிறேன். நான் நிறைய மக்களை சந்திப்பேன். ஏனெனில் நான் சிறிய வயதிலேயே நீதிபதியாகி விட்டேன். இதுமட்டுமின்றி காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பவும், வழக்குகளை தாமதமின்றி முடிக்கவும் இது உதவும்.” என்றார்.

இதையும் படிங்க: அரசு இல்லத்தை மூன்றே நாட்களில் காலி செய்த ரஞ்சன் கோகாய்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.