பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி தனது தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார்.
ஹிசுவாவில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்துகொள்ளவுள்ள ராகுல் காந்தி, மக்களிடையே உரையாற்றவுள்ளார். பூமிகார் சமூக வாக்கு வங்கியை நம்பியே காங்கிரஸ் இப்பகுதியில் களத்தில் இறங்கவுள்ளது. கடந்த தேர்தலில், இச்சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
கஹல்கவுன் தொகுதியில் நடைபெறவுள்ள மற்றொரு பேரணியிலும் ராகுல் காந்தி கொள்ளவுள்ளார். ஒன்பது முறை இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சதாந்த் சிங், இந்த தொகுதியை தனது மகனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார். லாலு பிரசாத் யாதவின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியுடன் இணைந்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை நீக்குவோம்' - காங்கிரஸ் உறுதி