பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் சிலை அருகே அக்கட்சித் தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜா சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்காததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அக்கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.