ETV Bharat / bharat

சிறந்த குழந்தைக்கான தேசிய விருது பெற்ற மாற்றுத்திறனாளி மாணவன் - National Award Winner of Transitional Student

புதுச்சேரி: தனது கையில் பாதிப்பு இருந்தும் ஒருபோதும் தன்னம்பிக்கையை இழக்காமல் சிறந்த குழந்தைக்கான தேசிய விருதை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவரை பற்றிய சிறப்பு தொகுப்பு

pudcherry differntly abled boy
pudcherry differntly abled boy
author img

By

Published : Feb 5, 2020, 1:42 PM IST


புதுச்சேரி தட்டாஞ்சாவடி விபிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரதா தம்பதி. இவர்களது மகன் வெங்கடசுப்ரமணியன் கேந்திர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு பிறக்கும் போதே இடது கையில் பாதிப்பு இருந்துள்ளது. இருப்பினும் அதை பொருட்படுத்தாத வெங்கடசுப்ரமணியன் இசை, கராத்தே, சமூகப்பணி, விளையாட்டு, யோகா, பிற மொழி கற்றல் போன்ற பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.

இவர் இளம்வயதாக இருக்கும் போதே, தேசிய அளவிலான காந்தி அமைதி முகாமில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ஹரியானா மாநிலம் கர்ணல்லில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இளைஞர் விழா மற்றும் கலை விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார். அது மட்டுமின்றி, மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், மாநில அளவில் நடந்துள்ள பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார்.

சிறந்த குழந்தைக்கான தேசிய விருது பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் - சிறப்பு தொகுப்பு

இவரது சாதனையைப் பாராட்டி புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பாக சிறப்பு விருதினை வழங்கியுள்ளது. மேலும் அபாகஸ் பயிற்சியில் 10 அலகுகளை முடித்துள்ள இவர் சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார். இப்படி பல விருதுகளுக்கு சொந்தக்காரரான வெங்கடசுப்ரமணியன் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பாக வழங்கும் தேசிய குழந்தை விருதுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையில் அந்த விருதையும் பெற்றார். அப்போது பிரதமர் மோடி இவரை பாராட்டியுள்ளார்.

இவரது தாய் ஜெயபிரதா கூறுகையில், "தனது மகனை நீச்சல் போட்டி, அபாகஸ் போட்டி உள்ளிட்ட போட்டிகளுக்கு பங்கேற்க அழைத்துச் செல்லும்போது எல்லோரும் எதிர்மறையாகவே பேசினர். இதனையும் மீறி நம்பிக்கையோடு துணிந்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்தேன். வீட்டில் கூட அவனது தந்தை சைக்கிள் ஓட்ட விடமாட்டார். எங்கேயும் செல்ல அனுமதிக்க மாட்டார். இதையெல்லாம் மீறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டியதால் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்" என்று பெருமிதம் கொண்டார்.

பின்னர் வெங்கட சுப்ரமணியன் கூறுகையில், "இந்த விருது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள் பெருமிதத்துடன் பார்க்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இதற்காக பேட்மிட்டன் பயிற்சி பெற்று வருகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு


புதுச்சேரி தட்டாஞ்சாவடி விபிபி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரதா தம்பதி. இவர்களது மகன் வெங்கடசுப்ரமணியன் கேந்திர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு பிறக்கும் போதே இடது கையில் பாதிப்பு இருந்துள்ளது. இருப்பினும் அதை பொருட்படுத்தாத வெங்கடசுப்ரமணியன் இசை, கராத்தே, சமூகப்பணி, விளையாட்டு, யோகா, பிற மொழி கற்றல் போன்ற பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார்.

இவர் இளம்வயதாக இருக்கும் போதே, தேசிய அளவிலான காந்தி அமைதி முகாமில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் ஹரியானா மாநிலம் கர்ணல்லில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இளைஞர் விழா மற்றும் கலை விழாவிலும் இவர் பங்கேற்றுள்ளார். அது மட்டுமின்றி, மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், மாநில அளவில் நடந்துள்ள பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார்.

சிறந்த குழந்தைக்கான தேசிய விருது பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் - சிறப்பு தொகுப்பு

இவரது சாதனையைப் பாராட்டி புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பாக சிறப்பு விருதினை வழங்கியுள்ளது. மேலும் அபாகஸ் பயிற்சியில் 10 அலகுகளை முடித்துள்ள இவர் சர்வதேச அளவிலான அபாகஸ் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார். இப்படி பல விருதுகளுக்கு சொந்தக்காரரான வெங்கடசுப்ரமணியன் இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பாக வழங்கும் தேசிய குழந்தை விருதுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையில் அந்த விருதையும் பெற்றார். அப்போது பிரதமர் மோடி இவரை பாராட்டியுள்ளார்.

இவரது தாய் ஜெயபிரதா கூறுகையில், "தனது மகனை நீச்சல் போட்டி, அபாகஸ் போட்டி உள்ளிட்ட போட்டிகளுக்கு பங்கேற்க அழைத்துச் செல்லும்போது எல்லோரும் எதிர்மறையாகவே பேசினர். இதனையும் மீறி நம்பிக்கையோடு துணிந்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்தேன். வீட்டில் கூட அவனது தந்தை சைக்கிள் ஓட்ட விடமாட்டார். எங்கேயும் செல்ல அனுமதிக்க மாட்டார். இதையெல்லாம் மீறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டியதால் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்" என்று பெருமிதம் கொண்டார்.

பின்னர் வெங்கட சுப்ரமணியன் கூறுகையில், "இந்த விருது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள் பெருமிதத்துடன் பார்க்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இதற்காக பேட்மிட்டன் பயிற்சி பெற்று வருகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு

Intro:சிறந்த குழந்தைக்கான தேசிய விருது பெற்ற புதுச்சேரி மாற்றுத்திறனாளி வெங்கடசுப்ரமனியன் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சாதனை படைத்துள்ளதாக அவரது தாயார் பெருமிதம்


Body:புதுச்சேரி தட்டாஞ்சாவடி விபிபி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி பஸ் ஓட்டுனர் இவரது மகன் வெங்கடசுப்ரமனியன் கேந்திர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார் இவரது தாயார் இல்லத்தரசி ஜெயப்பிரதா இவர்களது வளர்ப்பில் மாணவர் வெங்கட் சுப்பிரமணியன் ஒருகை ஊனமுற்ற மாணவர் படிப்பு இசை கராத்தே சமூகப்பணி விளையாட்டு யோகா பிற மொழி கற்றல் போன்ற பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார் சமீபத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற ஹரியான மாநிலத்தில் நடந்த மாநிலத்தில் உள்ள கர்ணல் லில் நடந்த இளைஞர் விழா மற்றும் கலை விழாவில் பங்கேற்று உள்ளார் தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் கிராமத்தில் நடந்த காந்தி அமைதி முகாமில் இளம் வயதிலேயே பங்கேற்றவர் என்ற பெருமைக்குரியவர் மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும் மாநில அளவில் நடந்துள்ள பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பலமுறை வென்றார் இவரது சாதனையை பாராட்டி புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சிறப்பு விருதினை வழங்கியுள்ளது மேலும் அபாகஸ் பயிற்சியில் 10 அலகுகளை முடித்தவர் சர்வதேச அளவிலான அபாகஸ்சில் தங்க பதக்கம் வென்றுள்ளார் சிறுவர்களை சிகரம் உள்பட பல விருதுகளை பெற்றவர் இத்தகுதிகளை கருத்தில்கொண்டு இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இவரது அயராத முயற்சியும் தன்னம்பிக்கையும் பாராட்டி தேசிய குழந்தை விருதுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்துள்ளது மேலும் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருதினை அவரிடம் பெற்றார் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து கலந்து கொண்டார் பிரதமர் மோடி இவரை பாராட்டியுள்ளார்

மகன் பெற்ற விருது தொடர்பாக தாய் ஜெயபிரதா கூறுகையில்

தனது மகன் ஊனமுற்றவர் அவரை நீச்சல் போட்டி அபாகஸ் போட்டி உள்ளிட்ட போட்டிகள் பங்கேற்க அழைத்துச் செல்லும்போது இது இவரால் முடியாதென்று எதிர்மறையாகவே பதில் தெரிவித்து வந்தனர் அதனை விட அதிக எதிர்ப்பு இருந்தது இதனையும் மீறி நம்பிக்கையோடு துணிந்து சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்தேன் வீட்டில் கூட அவனது தந்தை சைக்கிள் ஓட்ட பயந்து விடமாட்டார் எங்கேயும் செல்ல அனுமதிக்க மாட்டார் மேசைமேல் ஏறாதே என்று பயந்து பயந்து அவனை எதுவும் செய்ய விடமாட்டார்கள் இதையெல்லாம் மீறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டி இந்த சாதனையை படைத்துள்ளார் என்றும் அவர் பெருமிதமாகக் கூறினார்

தேசிய குழந்தை விருது தேர்வு செய்யப்பட்ட மாணவர் வெங்கட சுப்ரமணியன் கூறுகையில் இந்த விருது தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தனது நண்பர்கள் தன்னை பெருமிதத்துடன் பார்ப்பதாகும் தெரிவித்தார் மேலும் ஊனமுற்றோர் காக்க நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய இலக்கு என்றும் அவர் தெரிவித்தார் இதற்காக பேட்மிட்டன் பயிற்சி பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்


Conclusion:சிறந்த குழந்தைக்கான தேசிய விருது பெற்ற புதுச்சேரி மாற்றுத்திறனாளி வெங்கடசுப்ரமனியன் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சாதனை படைத்துள்ளதாக அவரது தாயார் பெருமிதம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.