ETV Bharat / bharat

சிதம்பரத்தின் கைது அவசரநிலை பிரகடனம்போல் உள்ளது: நாராயணசாமி பேட்டி

author img

By

Published : Aug 23, 2019, 2:24 PM IST

சென்னை: சிதம்பரத்தை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம்போல் தெரிகிறது என முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.

narayanasami

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய முன்னாள் நிதியமைச்சர் கைது செய்யப்பட்ட விதம் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அப்படி சிதம்பரம் என்ன பொருளாதாரம் குற்றம் செய்துவிட்டார், அவர் மீது என்ன குற்றம் என்பதை நிரூபிக்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சொன்ன வார்த்தையை வைத்து அவரை கைது செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சிதம்பரம் மத்திய அரசை எதிர்த்தும் பொருளாதார வீழ்ச்சியை குறித்தும் ட்விட்டரில் பதிவு செய்து வருவதும் பத்திரிகையில் எழுதுவதையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம்போல் தெரிகிறது. கொலைக் குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின்படி அவர் கைது செய்யப்படுவதை ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறினார்.

Puducherry
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி
மேலும், புதுச்சேரியில் அரசின் நடவடிக்கையில் தலையிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியதைக் குறித்து கேட்டபோது, நீதிமன்றம் ஆயிரம் முறை சொன்னாலும் புதுச்சேரி ஆளுநர் கேட்க மாட்டார் எனத் தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய முன்னாள் நிதியமைச்சர் கைது செய்யப்பட்ட விதம் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அப்படி சிதம்பரம் என்ன பொருளாதாரம் குற்றம் செய்துவிட்டார், அவர் மீது என்ன குற்றம் என்பதை நிரூபிக்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சொன்ன வார்த்தையை வைத்து அவரை கைது செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சிதம்பரம் மத்திய அரசை எதிர்த்தும் பொருளாதார வீழ்ச்சியை குறித்தும் ட்விட்டரில் பதிவு செய்து வருவதும் பத்திரிகையில் எழுதுவதையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம்போல் தெரிகிறது. கொலைக் குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின்படி அவர் கைது செய்யப்படுவதை ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறினார்.

Puducherry
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி
மேலும், புதுச்சேரியில் அரசின் நடவடிக்கையில் தலையிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியதைக் குறித்து கேட்டபோது, நீதிமன்றம் ஆயிரம் முறை சொன்னாலும் புதுச்சேரி ஆளுநர் கேட்க மாட்டார் எனத் தெரிவித்தார்.
Intro:புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி


Body:புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது

டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 7 மாதங்களாக நிலவில் இருந்த வழக்கு இரண்டு தினங்களுக்கு பிறகு ஓய்வு பெறப்படுகின்ற நீதிபதி அவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்டு முன்ஜாமீனை ரத்து செய்யப்பட்ட பிறகு இரண்டு மணி நேரத்தில் அமலாக்கப்பிரிவு துறையினர் புலனாய்வுத்துறையினர் சிதம்பரம் வீட்டுக்கு சென்று அவரை விசாரணை செய்ய இருக்கிறோம் என்ற போர்வையில் அவரை சந்திக்க முயன்று கிறார்கள் அப்போது அவர் வீட்டில் இல்லை ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அவர்கள் அங்கே சென்று இருக்கிறார்கள் புலனாய்வுத் துறையும் மற்றும் அமலாக்கப்பிரிவு துறையும் சிதம்பரம் அவர்களின் வழக்கில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன 7 மாதங்களாக தொடர்ந்து புலனாய்வுத் துறையும் அமலாக்கப்பிரிவு துறையும் வருவாய்த் துறையும் அவரை அழைத்து விசாரணை செய்து இருக்கிறார்கள் சிதம்பரம் அவர்கள் துறையின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் 5 மணி நேரத்திற்கும் மேலாக பதில் கொடுத்திருக்கிறார் மேலும் விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் சென்றிருக்கிறார் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் வெளிநாடு செல்ல மாட்டேன் என்று சொன்னால் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் சிதம்பரம் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் நடவடிக்கை என்பது அது அரசியல் காழ்புணர்ச்சியையும் உள்நோக்கத்தை காட்டுகிறது

அவர்கள் நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர் அதன் பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதில் நாலு நாள் நீதிமன்றம் காவல் வைக்கப்பட்டுள்ளது அவர் என்ன பொருளாதாரம் குற்றம் செய்து விட்டார் அவர் மீது என்ன குற்றம் என்பதை நிரூபிக்க வேண்டும் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவாளியான இந்திராணி முகர்ஜி சொன்ன வார்த்தை வைத்து அவரை கைது செய்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது

சிதம்பரம் அவர்கள் மத்திய அரசை எதிர்த்தும் பொருளாதார வீழ்ச்சியை குறித்தும் ட்விட்டரில் பதிவு செய்து வருவதும் பத்திரிகையில் எழுதுவது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ஆகவே அவரைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்வது என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது தங்களிடம் மிருக பலம் இருக்கிறது என்பதால் காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவரை ஒதுக்க நினைப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வருகிறது நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

சிதம்பரம் அவர்களை கைது செய்தது அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் போல் தெரிகிறது கொலை குற்றவாளி கொடுத்த வாக்குமூலம் படி அவரை கைது செய்யப்படுவதை ஜனநாயகத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதுச்சேரியின் அரசின் நடவடிக்கையில் தலையிட கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியதை குறித்து கேட்டபோது

நீதிமன்றம் ஆயிரம் முறை சொன்னாலும் பாண்டிச்சேரி கவர்னர் கேட்க மாட்டார் என தெரிவித்தார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.