சர்வதேச அளவில் பல முக்கிய நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்திய நாட்டையே கட்டிப்போட்டு வைத்துள்ளது. நாட்டின் அன்றாட செயல்பாடுகள் முடக்கப்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். உணவின்றி பல குடும்பங்கள் தவித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக அளவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாகவும், தனியார் நிறுவனம் மேற்கொண்ட சர்வே அடிப்படையில் மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகவும் நட்டா குறிப்பிட்டுள்ளார்.