ETV Bharat / bharat

குறையும் கச்சா எண்ணெய் விலை -  அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை!

author img

By

Published : May 5, 2020, 11:35 AM IST

டெல்லி அரசு விதித்துள்ள கூடுதல் விற்பனை வரி காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

Petrol price in Delhi
Petrol price in Delhi

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய் தேவை பெருமளவு குறைந்ததால் கச்சா எண்ணெயின் விலையும் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துவருகிறது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்ததால், உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கு பணம் கொடுத்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல கூறுமளவு நிலைமை மோசமானது.

தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 28.25 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியில் பெட்ரோலுக்கான விற்பனை வரியை 27 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கும், டீசலுக்கான விற்பனை வரியை 16.75 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கும் உயர்த்துவதாக டெல்லி அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு காரணமாக தேசிய தலைநகர் பகுதியில் பெட்ரோல் விலை ரூ 69.59இல் இருந்து 1.67 ரூபாய் அதிகரித்து ரூ. 71.26க்கும், டீசல் விலை ரூ 62.59இல் இருந்து 7.10 ரூபாய் அதிகரித்து ரூ. 69.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலையைவிட குறைவாக விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள்!

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய் தேவை பெருமளவு குறைந்ததால் கச்சா எண்ணெயின் விலையும் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துவருகிறது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்ததால், உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கு பணம் கொடுத்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல கூறுமளவு நிலைமை மோசமானது.

தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 28.25 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியில் பெட்ரோலுக்கான விற்பனை வரியை 27 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கும், டீசலுக்கான விற்பனை வரியை 16.75 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டிற்கும் உயர்த்துவதாக டெல்லி அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு காரணமாக தேசிய தலைநகர் பகுதியில் பெட்ரோல் விலை ரூ 69.59இல் இருந்து 1.67 ரூபாய் அதிகரித்து ரூ. 71.26க்கும், டீசல் விலை ரூ 62.59இல் இருந்து 7.10 ரூபாய் அதிகரித்து ரூ. 69.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலையைவிட குறைவாக விற்பனை செய்யப்படும் விமான எரிபொருள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.