ETV Bharat / bharat

புதுச்சேரியில் விவசாயி வீட்டுச் சுவற்றில் மயில் உயிரிழப்பு - Puducherry District News

புதுச்சேரி: தானாம்பாளையம் பகுதியில் மயில் ஒன்று விவசாயி வீட்டுச் சுவற்றில் மயங்கிய நிலையில் மோதியதால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது.

உயிரிழந்து காணப்படும் மயில்
உயிரிழந்து காணப்படும் மயில்
author img

By

Published : May 7, 2020, 5:08 PM IST

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்து தானாம்பாளையம் பகுதியில் மாலை நேரத்தில் மயில் ஒன்று விவசாயி வீட்டுச் சுவற்றில் மயங்கிய நிலையில் மோதியதால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தவளக்குப்பம் காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் இறந்த மயிலை ஒப்படைத்தனர். பின்னர் காவலர்கள் அதனை புதுச்சேரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இறந்த மயிலை உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

அதில் தவளகுப்பம் மற்றும் தானாம்பாளையம் பகுதி விவசாய பகுதி என்பதால் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய தானியங்கள் அல்லது இறைச்சி பிரியர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்!

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்து தானாம்பாளையம் பகுதியில் மாலை நேரத்தில் மயில் ஒன்று விவசாயி வீட்டுச் சுவற்றில் மயங்கிய நிலையில் மோதியதால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தவளக்குப்பம் காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் இறந்த மயிலை ஒப்படைத்தனர். பின்னர் காவலர்கள் அதனை புதுச்சேரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இறந்த மயிலை உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.

அதில் தவளகுப்பம் மற்றும் தானாம்பாளையம் பகுதி விவசாய பகுதி என்பதால் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய தானியங்கள் அல்லது இறைச்சி பிரியர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பிராணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.