ETV Bharat / bharat

வாட்ஸ்அப் பிரச்னையை தீர்க்க கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு! - வாட்ஸ்அப் மூலம் தனிநபர்கள் வேவு பார்க்கப்படுகிறார்கள்

டெல்லி: வாட்ஸ்அப் மூலம் தனிநபர்கள் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாளை நாடாளுமன்ற நிலைக்குழு கூடுகிறது.

Parliament
author img

By

Published : Nov 19, 2019, 4:33 PM IST

இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

1,400 இந்திய பயனாளிகளை மத்திய அரசு வேவு பார்ப்பதற்கு, அந்த இஸ்ரேலிய நிறுவனம் உதவியதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. தலித் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மூத்த அரசு அலுவலர்கள், அரசுக்கு எதிரான கருத்துடையவர்கள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டார்கள் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிரபல பத்திரிகையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் தனியுரிமை மீறல் குறித்து விவாதிக்க தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாளை கூடுகிறது. முன்னதாக, வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் அனைவரின் தனியுரிமையும் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும்... ஆதிக்கமும்...!

இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

1,400 இந்திய பயனாளிகளை மத்திய அரசு வேவு பார்ப்பதற்கு, அந்த இஸ்ரேலிய நிறுவனம் உதவியதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. தலித் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மூத்த அரசு அலுவலர்கள், அரசுக்கு எதிரான கருத்துடையவர்கள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டார்கள் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிரபல பத்திரிகையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் தனியுரிமை மீறல் குறித்து விவாதிக்க தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாளை கூடுகிறது. முன்னதாக, வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் அனைவரின் தனியுரிமையும் பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும்... ஆதிக்கமும்...!

Intro:Body:

*வாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது.*



*தனிநபர் உரிமையை பறிக்கும் விதத்தில் வாட்ஸ்அப்பில் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை.*


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.