ETV Bharat / bharat

துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 29, 2019, 6:31 PM IST

பாலக்காடு: கேரள வனப்பகுதியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச்  சண்டையில் இன்று ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

maoist

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திற்குள்பட்ட மஞ்சகட்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய மாவோயிஸ்ட்களைத் தேடும் பணி இன்று நடைபெற்றது. இன்று மல்லீஸ்வரன்முடி வனப்பகுதியில், கேரள மாநில தண்டர்போல்ட் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், நேற்று காயத்துடன் தப்பிய மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பவானி தளத்தின் தலைவராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

maoist, மாவோயிஸ்ட்
சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகம்

நேற்றும் இன்றும் ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் உயிரிழந்த மாவோயிஸ்ட்டுகளின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படும் எனவும் கேரள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திற்குள்பட்ட மஞ்சகட்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய மாவோயிஸ்ட்களைத் தேடும் பணி இன்று நடைபெற்றது. இன்று மல்லீஸ்வரன்முடி வனப்பகுதியில், கேரள மாநில தண்டர்போல்ட் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், நேற்று காயத்துடன் தப்பிய மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பவானி தளத்தின் தலைவராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

maoist, மாவோயிஸ்ட்
சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகம்

நேற்றும் இன்றும் ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் உயிரிழந்த மாவோயிஸ்ட்டுகளின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படும் எனவும் கேரள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

Intro:கேரள மாநிலத்தில் மஞ்சகட்டி வனப்பகுதியில் தண்டர் போல்ட் சிறப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இன்று மாவோயிஸ்ட் பவானி தள தலைவர் சுட்டுக்கொலை...Body:தமிழக கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கும், தண்டர்போல்ட் சிறப்பு அதிரடி படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட மஞ்சகட்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நேற்று துப்பாக்கி சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்ட்கள் கார்த்திக், சுரேஷ், ஸ்ரீ மதி ஆகியோர் உயிரிழந்தனர். இதனிடையே 5க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். அவர்களை தேடும் பணி இன்றும் நடைபெற்றது.இதில் மல்லீஸ்வரன்முடி வனப்பகுதியில் இன்று கேரள மாநில தண்டர்போல்ட் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கிருந்த மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இதில் நேற்று காயத்துடன் தப்பி சென்ற பவானி தளத்தின் தலைவராக உள்ள மணிவாசகம் என்ற மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா திவட்டிபட்டியை சார்ந்தவராவார்.இவர் மீது இரயிலை கவிழ்க்க திட்டமிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இன்று நடந்த சண்டையில் அங்கிருந்து சில மாவோயிஸ்ட்கள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் அப்பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். நேற்றும் இன்றும் ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவில் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.