ETV Bharat / bharat

திருநங்கைகளுக்கு ரிசர்வ் போலீஸில் இட ஒதுக்கீடு கோரும் சங்கமா இயக்கம்!

author img

By

Published : Jul 2, 2020, 6:33 PM IST

பெங்களூரு : கர்நாடக சிறப்பு ரிசர்வ் போலீஸ் படைகளில் தகுதி வாய்ந்த திருநங்கைகள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநங்கைகளுக்கு ரிசர்வ் போலீஸில் இட ஒதுக்கீடு கோரும் சங்கமா இயக்கம்!
திருநங்கைகளுக்கு ரிசர்வ் போலீஸில் இட ஒதுக்கீடு கோரும் சங்கமா இயக்கம்!

சிறப்பு ரிசர்வ் போலீஸ் படை நியமனங்கள் தொடர்பாக திருநங்கைகளின் நலனுக்காக செயல்படும் சங்கமா இயக்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

அம்மனுவில், " மத்திய, மாநில அரசு நியமனங்கள் அனைத்திலும் திருநங்கைகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய திருநங்கைகளுக்கு கல்வி நிறுவன சேர்க்கைகள், பொதுத் துறை நியமனங்கள் என அனைத்திலும் பின்தங்கிய வர்க்கமாக கருதி, இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிறப்பு ரிசர்வ் காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 2,672 பணியிடங்களை நியமிப்பதற்கான விளம்பரங்களை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இருப்பினும், அந்த விளம்பரத்தில் ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள் மட்டுமே பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதித்துள்ளது.

திருநங்கைகளுக்கு அதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த விளம்பரம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, திருநங்கைகளுக்கு நியமனங்களை அணுகவும், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை வழங்கவும் கர்நாடக மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் நடராஜ் ரங்கசாமி மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து மாநில அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பிர் மாநில அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வரும் ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

சிறப்பு ரிசர்வ் போலீஸ் படை நியமனங்கள் தொடர்பாக திருநங்கைகளின் நலனுக்காக செயல்படும் சங்கமா இயக்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

அம்மனுவில், " மத்திய, மாநில அரசு நியமனங்கள் அனைத்திலும் திருநங்கைகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய திருநங்கைகளுக்கு கல்வி நிறுவன சேர்க்கைகள், பொதுத் துறை நியமனங்கள் என அனைத்திலும் பின்தங்கிய வர்க்கமாக கருதி, இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிறப்பு ரிசர்வ் காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 2,672 பணியிடங்களை நியமிப்பதற்கான விளம்பரங்களை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இருப்பினும், அந்த விளம்பரத்தில் ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள் மட்டுமே பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதித்துள்ளது.

திருநங்கைகளுக்கு அதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த விளம்பரம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, திருநங்கைகளுக்கு நியமனங்களை அணுகவும், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை வழங்கவும் கர்நாடக மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் நடராஜ் ரங்கசாமி மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து மாநில அரசு தனது முடிவை தெரிவிக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பிர் மாநில அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வரும் ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.