பயங்கரவாத தடுப்புச் சட்ட அமலாக்க முகமையின் தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் முழுவதும் 19 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஃபசீவ் உர் ரெஹ்மான் என்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி குறித்த தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், என்.ஐ.ஏ. அலுவலர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருந்த ரெஹ்மானைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, மாநிலத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருந்ததாக என்.ஐ.ஏ. அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்தது - தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்