ETV Bharat / bharat

புதுச்சேரியில் 12ஆம் தேதி நாடகத் திருவிழா! - நாடகத் திருவிழா

புதுச்சேரி: இந்தியா மற்றும் வெளிநாடுகளிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி 21ஆவது நாடகத் திருவிழாவில் நடத்தப்பட இருப்பதாக தேசிய நாடகப் பள்ளி அறிவித்துள்ளது.

festival
festival
author img

By

Published : Feb 10, 2020, 4:18 PM IST

புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி சார்பில் பேராசிரியர் ராஜு, முனைவர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”புதுடில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருக்கும் 21ஆவது நாடகத் திருவிழா, புதுச்சேரியில் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை, 7 நாள்கள் நடக்கிறது. இந்த நாடக விழா புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகிறது. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் அஸ்வின்குமார், நாடக மற்றும் திரைப்பட நடிகர் நாசர் முன்னிலையில் இந்த நாடகத் திருவிழா தொடங்க உள்ளது.

இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாடகக் குழுக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் இடம்பெறுகின்றன. இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு நாடகம், வங்கதேசம் மற்றும் செக் குடியரசு நாட்டின் நாடகங்களும் அரங்கேறும். உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் இல்லை, எனவே அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்“ எனக் கூறினர்.

புதுச்சேரியில் நாடகத் திருவிழா - வரும் 12ஆம் தேதி நடக்கிறது

இதையும் படிங்க: 90's கிட்ஸ்களின் விளையாட்டை விளையாடும் இன்றைய குழந்தைகள்!

புதுடெல்லி தேசிய நாடகப் பள்ளி சார்பில் பேராசிரியர் ராஜு, முனைவர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”புதுடில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருக்கும் 21ஆவது நாடகத் திருவிழா, புதுச்சேரியில் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை, 7 நாள்கள் நடக்கிறது. இந்த நாடக விழா புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகிறது. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் அஸ்வின்குமார், நாடக மற்றும் திரைப்பட நடிகர் நாசர் முன்னிலையில் இந்த நாடகத் திருவிழா தொடங்க உள்ளது.

இவ்விழாவில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாடகக் குழுக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் இடம்பெறுகின்றன. இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு நாடகம், வங்கதேசம் மற்றும் செக் குடியரசு நாட்டின் நாடகங்களும் அரங்கேறும். உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் இல்லை, எனவே அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்“ எனக் கூறினர்.

புதுச்சேரியில் நாடகத் திருவிழா - வரும் 12ஆம் தேதி நடக்கிறது

இதையும் படிங்க: 90's கிட்ஸ்களின் விளையாட்டை விளையாடும் இன்றைய குழந்தைகள்!

Intro:உலகத்தரம் வாய்ந்த நாடகங்களோடு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வருகிறது 21வது நாடகத் திருவிழா இந்திய மற்றும் வெளிநாட்டு நாடுகளிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் வரும் 12ஆம் தேதி புதுச்சேரியில் தொடக்கம் அனைவரும் வருக என்று தேசிய நாடகப் பள்ளி அழைப்பு விடுத்துள்ளது


Body:புதுதில்லியில் தேசிய நாடகப் பள்ளி சார்பில் பேராசிரியர் ராஜு முனைவர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் இன்று செய்தியாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்

புதுடில்லியின் தேசிய நாடகப் பள்ளி ஏற்பாடு செய்திருக்கும் 21வது நாடகத் திருவிழா புதுச்சேரியில் பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை 7 நாட்கள் புதுச்சேரியில் திருவிழா நடைபெறும் என்றார் புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின் குமார் நாடக திரைப்பட நடிகர் நாசர் முன்னிலையில் இந்த நாடக விழா தொடங்கப்பட உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தார் இவ்விழாவில் நாடக ஆர்வலர்களுக்கு உன்னதமான அனுபவத்தை கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது உள்நாடு மற்றும் வெளிநாட்டு நாடக குழுக்களில் பல்வேறு நாடுகளில் பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம் இந்திய மற்றும் வெளிநாட்டு நாடக குழுக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் இதில் இடம்பெறுகின்றன இரண்டு மலையாள நாடகங்கள் தமிழ் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் தலா ஒரு நாடகமும் பங்காளதேஷ் மற்றும் செக் குடியரசு நாட்டில் நாடகங்களும் முறையே வங்காள மொழியில் ஆங்கிலத்திலும் அரங்கேறும் என்று அவர்கள் தெரிவித்தனர் இந்த நாடக விழா முதன் முறையாக புதுச்சேரியில் நடைபெறுகிறது என்றும் உலகம்தரம் வாய்ந்த நாடகத்தை நம்முடைய தற்கால நாடகங்கள் மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்திற்காக இது நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர் நுழைவுக் கட்டணம் இல்லை இலவசம் அனைவரும் வருக என அழைப்பு விடுத்து உள்ளனர்


Conclusion:உலகத்தரம் வாய்ந்த நாடகங்களோடு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வருகிறது 21வது நாடகத் திருவிழா இந்திய மற்றும் வெளிநாட்டு நாடுகளிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நாடகங்கள் வரும் 12ஆம் தேதி அனைவரும் வருக என்று தேசிய நாடகப் பள்ளி அழைப்பு விடுத்துள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.