இதுகுறித்து பேசிய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா பேசுகையில், பீகாரில் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை முதலமைச்சர், டிஜிபி ஆகியோரிடம் நேரில் விவாதிப்போம் என்றார்.
மேலும் நான்கு வாரங்களுக்கு முன்னதாக ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். மேலும் அந்த பெண் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் நிச்சயம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.