நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் கட்டிடம் ஒன்று கடந்த 12ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் நோயாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி சிலர் மீட்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிடம் கட்டிய ஒப்பந்தக்காரரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.