ETV Bharat / bharat

திருமண வீட்டில் போதையில் அடிதடி: ஒருவர் கொலை!

author img

By

Published : May 19, 2020, 11:23 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஆசிப் நகரில் மே 17ஆம் தேதி நடைபெற்ற திருமண வீட்டில் ஏற்பட்டத் தகராறில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder  lockdown  Hyderabad  wedding ceremony  ஹைதராபாத் திருமண வீடு கொலை  ஹைதராபாத் கொலை
ஹைதராபாத் திருமணவீட்டில் போதையில் அடிதடி: ஒருவர் கொலை

தெலங்கானா மாநிலம், ஆசிப் நகரில் கடந்த 17ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சிலர் மது அருந்தியுள்ளனர். மது அருந்திய சிலர் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். அது கைகலப்பாக மாறியபோது, அடையாளம் தெரியாத நபரால் 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், உயிரிழந்தவர் காடா காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தங்கையுடன் பழக்கம்... ஆத்திரத்தில் கொலை செய்த பெண்ணின் சகோதரர்கள்!

தெலங்கானா மாநிலம், ஆசிப் நகரில் கடந்த 17ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், சிலர் மது அருந்தியுள்ளனர். மது அருந்திய சிலர் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். அது கைகலப்பாக மாறியபோது, அடையாளம் தெரியாத நபரால் 25 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், உயிரிழந்தவர் காடா காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தங்கையுடன் பழக்கம்... ஆத்திரத்தில் கொலை செய்த பெண்ணின் சகோதரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.