ETV Bharat / bharat

மருத்துவத்துறை காலிப் பணியிட நேர்முகத் தேர்வு: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

புதுச்சேரி: மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

author img

By

Published : Sep 3, 2020, 7:55 PM IST

மருத்துவத் துறை காலிப் பணியிட நேர்முகத் தேர்வு: 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு!
200 students attend medical interview

புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்காக புதுச்சேரி அரசு முடிவு செய்தது. அதன்படி, தற்காலிகமாக மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.

இதில், 39 பொது சிகிச்சை மருத்துவர், 26 செவிலியர், 21 கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கி 5ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவிருக்கிறது. மருத்துவப் படிப்பு, செவிலியர் படிப்பு படித்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் கரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்காக புதுச்சேரி அரசு முடிவு செய்தது. அதன்படி, தற்காலிகமாக மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.

இதில், 39 பொது சிகிச்சை மருத்துவர், 26 செவிலியர், 21 கிராம சுகாதார செவிலியர் உள்ளிட்ட 86 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று தொடங்கி 5ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவிருக்கிறது. மருத்துவப் படிப்பு, செவிலியர் படிப்பு படித்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.