கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர்களுடனான வீடியோ கான்பரன்சிங் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் எனவே கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆனால், இப்போது வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சோதனை காலத்தில் திருவிழாக்கள் புத்துயிர் அளிக்கட்டும் - குடியரசு துணை தலைவர்