ETV Bharat / bharat

'30 ஆண்டுகளில் மிக மோசமான இழப்பை டாடா நிறுவனம் இப்போது கண்டிருக்கிறது'

author img

By

Published : Jun 13, 2020, 10:21 PM IST

டெல்லி: முப்பது ஆண்டுகளில் கண்டிராத மிக மோசமான நிகர இழப்பை 2019ஆம் ஆண்டில் டாடா குழுமம் கண்டிருக்கிறது என சைரஸ் மிஸ்திரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Mistry questions Tata Group performance; says group's loss at Rs 13,000 crore in 2019
Mistry questions Tata Group performance; says group's loss at Rs 13,000 crore in 2019

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்துவந்த சைரஸ் மிஸ்திரி, 2016ஆம் ஆண்டில் நிர்வாகத் திறன் குறைபாட்டைக் காரணம் காட்டி அதிரடியாக நீக்கப்பட்டார். பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப்போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ”கம்பெனிகள் சட்டப்படி என்னைப் பதவி நீக்கவில்லை என்பதால், பதவி நீக்கம் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மிஸ்திரி கோரியிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி மாதம் தீர்ப்பாயத்தின் உத்தரவு அமலுக்கு வரவிருந்த நிலையில், அதனை எதிர்த்து டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை கடந்த மே 29ஆம் தேதியன்று விசாரிக்கத் தொடங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சைரஸ் மிஸ்திரி தனது வாக்குமூலத்தை நேற்று சமர்பித்தார்.

அதில், "2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று டாடா சன்ஸ் தலைவராக இருந்த என்னை எந்தவிதமான காரணமும் தெரிவிக்காத ஒரு போர்டு ரூம் சதித்திட்டத்தில் நீக்கினர். ஆனால், இதற்குப் பின்னர் பத்திரிகை அறிக்கைகளில், நான் செயல்திறன் இல்லாததால் முதன்மையாக நீக்கப்பட்டதாக குழு கூறியது. டாடா சன்ஸ் எனது கண்காணிப்பின் கீழ் நஷ்டமடைந்ததாகக் கூறியது. ஆனால், இது ஆண்டுக்கு சராசரியாக 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.

எனது செயல்திறனை இழிவுபடுத்தும் நோக்கில் இயக்க லாபத்தை அடைவதற்கு டிசிஎஸ்ஸிலிருந்து ஈவுத்தொகையை விலக்க டாடா முயன்றது. எனது தலைமையிலான டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்க இழப்பு 2016ஆம் ஆண்டில் சுமார் 550 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இப்போது, ரத்தன் டாடா தலைமையில் 2019 ஆம் ஆண்டில் இயக்க இழப்புகளில் 282 சதவீதம் அதிகரித்து 2,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ரத்தன் டாடாவின் மோசமான செயல்திறன் காரணமாக எழுந்த பிரச்னை.

என்னை நீக்கியதில் என் செயல்திறனுக்கு தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்ட மற்றொரு உதாரணத்தைச் சொல்ல விழைகிறேன். நான் தலைவராக இருந்தபோது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டாடா குழுமத்தில் சென்செக்ஸ் 5 விழுக்காடாக விஞ்சி நின்றது.

எனது பதவிக் காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் குழு நிறுவனங்கள் ஆண்டு நிகர வருமானத்தில் 34.6 விழுக்காடு வளர்ச்சியையும், காப்புரிமை தாக்கல்களில் 100 விழுக்காடு உயர்வையும் பதிவு செய்துள்ளன.

இவையனைத்தும் பிராண்ட் மதிப்பில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்திற்கு வழிவகுத்தன. டாடா குழுமத்தின் தலைவராக நான் இருந்தபோது அதன் கடன் 69,877 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, 80,000 கோடி ரூபாயாக வெறும் நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் வாங்கும் விகிதம் 92 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 2016ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 1,453 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2019ஆம் ஆண்டில் 2,776 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாடா குழுமத்தின் தலைவராக நான் இருந்தபோது முதலீடுகளின் பெரும் மதிப்பை நிறுவனம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், டாடா சன்ஸ் சுமார் 67,000 கோடி ரூபாய் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களில் முதலீடு செய்தது என்பது உண்மைதான். ஆனால், அந்த முதலீடுகள் தற்போதைய மதிப்பில் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளன.

இதில், பெரும்பாலானவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டவை என்றாலும், பட்டியலிடப்பட்ட தொலைத்தொடர்பு அல்லாத முதலீடுகளின் மதிப்பு 23 விழுக்காடாக மதிப்பிழந்து 16,243 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 27 விழுக்காட்டைத் திரட்டியது, குறியீட்டை 50 விழுக்காடு குறைத்து மதிப்பிட்டது. ரத்தன் டாடாவின் தவறான பார்வை, மோசமான முடிவுகள் என அனைத்தும் இந்திய நிறுவன வரலாற்றில் அக்குழுமத்திற்கு மிகப்பெரிய மதிப்பிழப்பை ஏற்படுத்தி அழிவுக்கு வழிவகுத்தன.

குழுவில் குழப்பத்திற்கு பொறுப்பான டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலர்களை இப்போதும் உடன் வைத்திருக்க ரத்தன் டாடா முற்படுகிறார். இதனை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளன" எனக் கூறியுள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகப் பதவி வகித்துவந்த சைரஸ் மிஸ்திரி, 2016ஆம் ஆண்டில் நிர்வாகத் திறன் குறைபாட்டைக் காரணம் காட்டி அதிரடியாக நீக்கப்பட்டார். பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப்போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்தில் 2016ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ”கம்பெனிகள் சட்டப்படி என்னைப் பதவி நீக்கவில்லை என்பதால், பதவி நீக்கம் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மிஸ்திரி கோரியிருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு டிசம்பர் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி மாதம் தீர்ப்பாயத்தின் உத்தரவு அமலுக்கு வரவிருந்த நிலையில், அதனை எதிர்த்து டாடா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை கடந்த மே 29ஆம் தேதியன்று விசாரிக்கத் தொடங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சைரஸ் மிஸ்திரி தனது வாக்குமூலத்தை நேற்று சமர்பித்தார்.

அதில், "2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று டாடா சன்ஸ் தலைவராக இருந்த என்னை எந்தவிதமான காரணமும் தெரிவிக்காத ஒரு போர்டு ரூம் சதித்திட்டத்தில் நீக்கினர். ஆனால், இதற்குப் பின்னர் பத்திரிகை அறிக்கைகளில், நான் செயல்திறன் இல்லாததால் முதன்மையாக நீக்கப்பட்டதாக குழு கூறியது. டாடா சன்ஸ் எனது கண்காணிப்பின் கீழ் நஷ்டமடைந்ததாகக் கூறியது. ஆனால், இது ஆண்டுக்கு சராசரியாக 85 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.

எனது செயல்திறனை இழிவுபடுத்தும் நோக்கில் இயக்க லாபத்தை அடைவதற்கு டிசிஎஸ்ஸிலிருந்து ஈவுத்தொகையை விலக்க டாடா முயன்றது. எனது தலைமையிலான டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்க இழப்பு 2016ஆம் ஆண்டில் சுமார் 550 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இப்போது, ரத்தன் டாடா தலைமையில் 2019 ஆம் ஆண்டில் இயக்க இழப்புகளில் 282 சதவீதம் அதிகரித்து 2,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ரத்தன் டாடாவின் மோசமான செயல்திறன் காரணமாக எழுந்த பிரச்னை.

என்னை நீக்கியதில் என் செயல்திறனுக்கு தொடர்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்ட மற்றொரு உதாரணத்தைச் சொல்ல விழைகிறேன். நான் தலைவராக இருந்தபோது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் டாடா குழுமத்தில் சென்செக்ஸ் 5 விழுக்காடாக விஞ்சி நின்றது.

எனது பதவிக் காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் குழு நிறுவனங்கள் ஆண்டு நிகர வருமானத்தில் 34.6 விழுக்காடு வளர்ச்சியையும், காப்புரிமை தாக்கல்களில் 100 விழுக்காடு உயர்வையும் பதிவு செய்துள்ளன.

இவையனைத்தும் பிராண்ட் மதிப்பில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்திற்கு வழிவகுத்தன. டாடா குழுமத்தின் தலைவராக நான் இருந்தபோது அதன் கடன் 69,877 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, 80,000 கோடி ரூபாயாக வெறும் நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் வாங்கும் விகிதம் 92 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது 2016ஆம் ஆண்டில் அதன் மதிப்பு 1,453 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2019ஆம் ஆண்டில் 2,776 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாடா குழுமத்தின் தலைவராக நான் இருந்தபோது முதலீடுகளின் பெரும் மதிப்பை நிறுவனம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், டாடா சன்ஸ் சுமார் 67,000 கோடி ரூபாய் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களில் முதலீடு செய்தது என்பது உண்மைதான். ஆனால், அந்த முதலீடுகள் தற்போதைய மதிப்பில் 40,000 கோடி ரூபாயை இழந்துள்ளன.

இதில், பெரும்பாலானவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஏற்பட்டவை என்றாலும், பட்டியலிடப்பட்ட தொலைத்தொடர்பு அல்லாத முதலீடுகளின் மதிப்பு 23 விழுக்காடாக மதிப்பிழந்து 16,243 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 27 விழுக்காட்டைத் திரட்டியது, குறியீட்டை 50 விழுக்காடு குறைத்து மதிப்பிட்டது. ரத்தன் டாடாவின் தவறான பார்வை, மோசமான முடிவுகள் என அனைத்தும் இந்திய நிறுவன வரலாற்றில் அக்குழுமத்திற்கு மிகப்பெரிய மதிப்பிழப்பை ஏற்படுத்தி அழிவுக்கு வழிவகுத்தன.

குழுவில் குழப்பத்திற்கு பொறுப்பான டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலர்களை இப்போதும் உடன் வைத்திருக்க ரத்தன் டாடா முற்படுகிறார். இதனை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளன" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.