ETV Bharat / bharat

'பேரிடர் காலத்தில் அலுவலர்களின் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது' - அபிஷேக் மனு சிங்வி - பேரிடர் கால சம்பிரதாயங்கள் மனிதத் தன்மையற்றது

டெல்லி: பேரிடர் காலத்தில் அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் மனுசிங்வி
அபிஷேக் மனுசிங்வி
author img

By

Published : Jul 9, 2020, 7:15 PM IST

கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வேறு யாரும் அனுபவித்திராத அவலத்தை வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்டனர்.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாததற்கு முன்பு போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தங்களின் சொந்த கிராமங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அவர்களில் பலர் இன்னமும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துவந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பேரிடர் காலத்தில் அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது என்றார்.

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சில ஆலோசனைகளை வழங்கிய அவர், "பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அரசு திட்டங்களால் பயன் கிடைக்கிறது. இதனால், பதிவு செய்யப்படாத 1.5 கோடி தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதில், தளர்வுகளை ஏற்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் நிர்வாக, அலுவலக சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு அளிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்காக வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், உணவு போன்ற விவரங்களை அறிக்கையாக மாநில அரசுகள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர், வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டைப் பின்பற்றும் கர்நாடகா!

கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வேறு யாரும் அனுபவித்திராத அவலத்தை வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்டனர்.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாததற்கு முன்பு போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தங்களின் சொந்த கிராமங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அவர்களில் பலர் இன்னமும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்துவந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பேரிடர் காலத்தில் அலுவலர்களால் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது என்றார்.

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சில ஆலோசனைகளை வழங்கிய அவர், "பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அரசு திட்டங்களால் பயன் கிடைக்கிறது. இதனால், பதிவு செய்யப்படாத 1.5 கோடி தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். இதில், தளர்வுகளை ஏற்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் நிர்வாக, அலுவலக சம்பிரதாயங்கள் மனிதத்தன்மையற்றது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு அளிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்" என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்காக வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், உணவு போன்ற விவரங்களை அறிக்கையாக மாநில அரசுகள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர், வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டைப் பின்பற்றும் கர்நாடகா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.