ETV Bharat / bharat

'மத பரப்புரையாளர் ஜாகிரை ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை' - மகாதீர் பின் முகமது

கோலாலம்பூர் : இஸ்லாமிய மத பரப்புரையாளரான ஜாகிர் நாயக்கை ஏற்க எந்த நாடும் தயாராக இல்லை என மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 8, 2020, 7:13 PM IST

மத பிரச்சாரகர் ஜாகிரை ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை - மகாதீர் பின் முகமது
மத பிரச்சாரகர் ஜாகிரை ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை - மகாதீர் பின் முகமது

வங்கதேச தலைநகரான டாக்காவில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸிடம் வங்கதேச அரசு மேற்கொண்ட விசாரணையில் மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் (54) பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்கதேச அரசு வலியுறுத்தியது. வங்கதேசம் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து தேசியப் புலனாய்வு முகமை இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடைசெய்தது. தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும், போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது.

அப்போது, வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என அஞ்சி மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்த, அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் நிரந்தர வசிப்பிட குடியுரிமையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசிற்கு முறையான கோரிக்கைகளை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது.

கடந்த ஆண்டு, ரஷ்யாவில் நடந்த 5ஆவது கிழக்கு நாடுகளின் பொருளாதார சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், மலேசிய தலைவர் மகாதீர் பின் முகமதுவை சந்தித்தபோது, நாயக் குறித்து பேசியதாக அறிய முடிந்தது. இதையடுத்து, தற்போது இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, "தற்போதைக்கு நாயக் இங்கேயே இருக்க முடியும். ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்க வேறு நாட்டுக்கு அவரை அனுப்ப விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, பல நாடுகள் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. உறுதியாக, நாயக்கை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம். அவருக்கு அங்கு பாதுகாப்பு இருக்காதென நாங்கள் நினைக்கிறோம்" என கூறியுள்ளார்.

இது இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பாதிக்கலாம் என தென்கிழக்கு ஆசிய அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவற்றை கூறி இவரை இந்தியாவிற்கு கொண்டு வர, இந்திய அரசு இன்டர் போல் உதவியை நாடியது கவனிக்கத்தக்கது.

வங்கதேச தலைநகரான டாக்காவில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸிடம் வங்கதேச அரசு மேற்கொண்ட விசாரணையில் மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கின் (54) பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது என தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்கதேச அரசு வலியுறுத்தியது. வங்கதேசம் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து தேசியப் புலனாய்வு முகமை இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தடைசெய்தது. தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும், போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும் தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது.

அப்போது, வெளிநாட்டில் இருந்த அவர் இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என அஞ்சி மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்த, அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் நிரந்தர வசிப்பிட குடியுரிமையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசிற்கு முறையான கோரிக்கைகளை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது.

கடந்த ஆண்டு, ரஷ்யாவில் நடந்த 5ஆவது கிழக்கு நாடுகளின் பொருளாதார சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், மலேசிய தலைவர் மகாதீர் பின் முகமதுவை சந்தித்தபோது, நாயக் குறித்து பேசியதாக அறிய முடிந்தது. இதையடுத்து, தற்போது இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, "தற்போதைக்கு நாயக் இங்கேயே இருக்க முடியும். ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்க வேறு நாட்டுக்கு அவரை அனுப்ப விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, பல நாடுகள் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. உறுதியாக, நாயக்கை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம். அவருக்கு அங்கு பாதுகாப்பு இருக்காதென நாங்கள் நினைக்கிறோம்" என கூறியுள்ளார்.

இது இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பாதிக்கலாம் என தென்கிழக்கு ஆசிய அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது, கருப்புப் பண மோசடி ஆகியவற்றை கூறி இவரை இந்தியாவிற்கு கொண்டு வர, இந்திய அரசு இன்டர் போல் உதவியை நாடியது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.