ETV Bharat / bharat

பதவியேற்பு: மேலவை மூலம் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்த தாக்கரே!

author img

By

Published : May 18, 2020, 10:20 AM IST

Updated : May 18, 2020, 4:23 PM IST

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மேலவை உறுப்பினராக பதவியேற்கும் நிலையில், அவரது பதவிக்கு இனி ஆறு மாத காலத்திற்கு எந்தச் சிக்கலும் இல்லை.

Udhhav
Udhhav

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிரா மேலவை உறுப்பினராகப் பதவியேற்கிறார். மகா விகாஸ் அகாதி கூட்டணி மூலம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இனி தனது பதவியில் ஆறுமாத காலம் சிக்கலின்றி நீடிக்கலாம்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் அக்கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். உத்தவ் தாக்கரே ஆறு மாத காலத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், ஊரடங்கு காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியதால், தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகவே, மேலவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தவ் தாக்கரே தனது பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: ஊரடங்கு 4.0 - மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிரா மேலவை உறுப்பினராகப் பதவியேற்கிறார். மகா விகாஸ் அகாதி கூட்டணி மூலம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இனி தனது பதவியில் ஆறுமாத காலம் சிக்கலின்றி நீடிக்கலாம்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் அக்கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.

சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். உத்தவ் தாக்கரே ஆறு மாத காலத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், ஊரடங்கு காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் முடங்கியதால், தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது. ஆகவே, மேலவை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தவ் தாக்கரே தனது பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: ஊரடங்கு 4.0 - மத்திய அரசின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

Last Updated : May 18, 2020, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.