ETV Bharat / bharat

பிகார் மகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்று வெளியீடு!

author img

By

Published : Oct 3, 2020, 5:11 PM IST

பாட்னா : பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகவுள்ள பிகார் மகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு!
இன்று வெளியாகவுள்ள பிகார் மகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு!

பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக அக்டோபர் 28 ஆம் தேதி அன்று 16 மாவட்டங்களைச் சேர்ந்த 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் (அக்.1) தொடங்கியது.

இருப்பினும், தொகுதி பங்கீட்டில் இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் மகா கூட்டணி மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளில் இழுபறி நிலையே நீடித்து வருகின்றன.

இந்நிலையில், பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான (கிராண்ட் அலையன்ஸ்) பிரமாண்ட கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, இன்று மாலை தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள நிகழ்வில் அறிவிக்கப்பட உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஜேடி 145 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடதுசாரிகள் 30 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிகார் காங்கிரஸ் கமிட்டியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பால்மிகி நகர் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இருவரும் விரும்புவதால் அதில் மட்டும் சிறு சிக்கல் எழுந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இந்துஸ்தானி ஆவாம் மோர்சா, லோக் ஜனசக்தி இடம்பெற்றிருந்தாலும் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையில் ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள அம்மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக அக்டோபர் 28 ஆம் தேதி அன்று 16 மாவட்டங்களைச் சேர்ந்த 71 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் (அக்.1) தொடங்கியது.

இருப்பினும், தொகுதி பங்கீட்டில் இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் மகா கூட்டணி மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளில் இழுபறி நிலையே நீடித்து வருகின்றன.

இந்நிலையில், பிகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான (கிராண்ட் அலையன்ஸ்) பிரமாண்ட கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு, இன்று மாலை தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள நிகழ்வில் அறிவிக்கப்பட உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ஜேடி 145 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடதுசாரிகள் 30 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிகார் காங்கிரஸ் கமிட்டியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பால்மிகி நகர் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் இருவரும் விரும்புவதால் அதில் மட்டும் சிறு சிக்கல் எழுந்துள்ளதாக நம்பப்படுகிறது.

ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இந்துஸ்தானி ஆவாம் மோர்சா, லோக் ஜனசக்தி இடம்பெற்றிருந்தாலும் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையில் ராஷ்டிரிய லோக் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.