ETV Bharat / bharat

உ.பி., காவல் துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரிய பாஜக துணைத் தலைவர்!

author img

By

Published : Oct 5, 2020, 2:39 PM IST

மும்பை: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியிடம் வரம்பு மீறி நடந்துகொண்ட காவல் துறையினர் மீது உத்தரப் பிரதேச அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர பாஜக துணைத் தலைவர் சித்ரா வாக் வலியுறுத்தியுள்ளார்.

உ.பி., காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜக துணைத்தலைவர்!
உ.பி., காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜக துணைத்தலைவர்!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய அப்பெண், 15 நாள்கள் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.

அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் காவல் துறையும், மாநில பாஜக அரசும் நடந்துகொண்டவிதம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்ல கடந்த 2ஆம் தேதியன்று ஹத்ராஸுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைத் தடுத்த உ.பி. காவல் துறையினர் கீழே தள்ளி தரக்குறைவாக நடத்தினர்.

இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் தனது சகோதரர் ராகுல் காந்தியை அழைத்துக்கொண்டு பிரியங்கா காந்தி மீண்டும் ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் காவல் துறை அடக்குமுறைகளைத் தாண்டி நுழைந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அவரது கிராமத்தைச் சென்றடைந்த பிரியங்கா காந்தியை அங்கிருந்த ஆண் காவலர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு காவலர் பிரியங்கா காந்தியின் உடையை இழுத்துப் பிடித்து, அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

உத்தரப் பிரதேச காவல் துறையினரின் காட்டாட்சி என்றும் அப்பட்டமான அராஜகமென அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா வாக்கும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "ஹத்ராஸுக்குச் செல்லும் வழியில் டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியிடம் கௌதம புத்தா நகர் (நொய்டா) காவல் துறையினர் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டின் மிக முக்கிய பெண் அரசியல் தலைவரின் ஆடைகளில் கைவைக்க ஒரு ஆண் காவலருக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

காவல் துறையினர் தங்களது வரம்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியப் பண்பாட்டை நம்பும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பாஜக துணைத் தலைவர் வாக்கின் இந்தக் கண்டனத்திற்கு மகாராஷ்டிர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் தம்பே தனது பாராட்டுகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய அப்பெண், 15 நாள்கள் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார்.

அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் காவல் துறையும், மாநில பாஜக அரசும் நடந்துகொண்டவிதம் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொல்ல கடந்த 2ஆம் தேதியன்று ஹத்ராஸுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைத் தடுத்த உ.பி. காவல் துறையினர் கீழே தள்ளி தரக்குறைவாக நடத்தினர்.

இந்தச் சம்பவம் நடந்த மறுநாள் தனது சகோதரர் ராகுல் காந்தியை அழைத்துக்கொண்டு பிரியங்கா காந்தி மீண்டும் ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் காவல் துறை அடக்குமுறைகளைத் தாண்டி நுழைந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அவரது கிராமத்தைச் சென்றடைந்த பிரியங்கா காந்தியை அங்கிருந்த ஆண் காவலர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒரு காவலர் பிரியங்கா காந்தியின் உடையை இழுத்துப் பிடித்து, அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

உத்தரப் பிரதேச காவல் துறையினரின் காட்டாட்சி என்றும் அப்பட்டமான அராஜகமென அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா வாக்கும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "ஹத்ராஸுக்குச் செல்லும் வழியில் டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியிடம் கௌதம புத்தா நகர் (நொய்டா) காவல் துறையினர் நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டின் மிக முக்கிய பெண் அரசியல் தலைவரின் ஆடைகளில் கைவைக்க ஒரு ஆண் காவலருக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

காவல் துறையினர் தங்களது வரம்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியப் பண்பாட்டை நம்பும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற தவறான செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

பாஜக துணைத் தலைவர் வாக்கின் இந்தக் கண்டனத்திற்கு மகாராஷ்டிர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் தம்பே தனது பாராட்டுகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.