ETV Bharat / bharat

கோவிட்-19 - இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

author img

By

Published : Apr 14, 2020, 6:31 PM IST

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் அருகே அமைதி நிலவுவதற்கான அனைத்துப் பொறுப்பினையும் நான் பாகிஸ்தான் ராணுவத்தின் வாசலண்டையில் (கேட்) சுமத்தியுள்ளதாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவேயாகும். இந்திய ராணுவமானது எல்லைப் பகுதியில் ஒரு ஆக்கிரமிப்புத் தோரணையைக் கொண்டுள்ளது.

India Pakistan
India Pakistan

உலகம் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நாம் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையினைச் சமாளிக்க முயன்று கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கும் தருவாயில், தெற்கு ஆசியாவின் ஒரு பகுதியானது பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறது. கட்டுப்பாட்டுக் கோட்டின் எல்லையில் இந்திய, பாகிஸ்தானிய ராணுவங்களுக்கு இடையே குருதிப் போரானது குமுறிக் கொண்டிருக்கிறது.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் மாதம் மட்டும் 411 போர் நிறுத்த மீறல்கள் நடந்துள்ளன. இது, கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நடந்தேறிய மீறுதல்களைவிட, 50 விழுக்காடு அதிகமாகவும் 2018 ஆம் ஆண்டினைக் காட்டிலும் இரு மடங்குமாகும்.

ஏப்ரல் 5 அன்று, கெரான் பிரிவில் ஊடுருவ முயன்ற ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஐந்து சிறப்புப் படையினர் உயிர்த் தியாகம் செய்து உள்ளனர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல், வெடிகுண்டுகள் மீதான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள காணொலியினை வெளியிட்டது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதேபகுதியில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இந்தியக் குடிமக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் ஒரு எட்டு வயது குழந்தையும் இருந்தது.

இத்தருணத்தில், வெளிப்படையாகவே சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நினைவுச் சின்ன விகிதமான நெருக்கடியினைக் கையாளும் தருணத்தில் எல்லைப் பகுதியெங்கும் ஒரு சமாதானக் காலத்தைக் கொண்டிருக்க முடியாதா? நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய பொதுவான எதிரியை எதிர்த்துப் போராடுவதில் நம்முடைய ஆற்றலைத் திசை திருப்ப வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை "ஆம்" என்பதே ஆகும்.

ஆனால், துரதிருஷ்டவசமான உண்மை என்னவென்றால், தார்மீகப் பரிமாணங்கள் எப்போதுமே தேசிய முடிவுகளைக் கட்டளையிடுவது இல்லை என்பதுதான். இரு ராணுவங்களின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர்களின் சொற்களின் அடிப்படையில்தான் எல்லைக் கோட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடானது நடத்தப்படுகிறது.

தரப்படும் நிலையான அறிக்கைகள் கூறுவதென்னவென்றால், "கடுமையானப் பதிலடி" கொடுக்கப்பட்ட மறுபுறத்தில், "தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு" நடத்தப்பட்டது என்பதேயாகும். ஆனால், உண்மையானது சற்று மாறாகவே இருக்கிறது.

போர் நிறுத்த மீறுதல்கள் என்பது வெறுமனே பதிலுக்குப் பதிலடி கொடுப்பதென்பது அல்ல. ஆனால், அது எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவ வேண்டியதொரு பெரியப் பாதுகாப்பு நிலைமையின் வெளிப்பாடாகும்.

கடந்த 2012 வரை இருதரப்பினருமே இந்தியா பாகிஸ்தான் இடையேயான 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பொதுவாகவே மதித்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் பகுதியில் இருந்த இந்திய ரோந்து வாகனத்தின் மீது ஒரு தாக்குதல் ஆரம்பித்தது. அதில் லான்ஸ் நாய்க் ஹேம்ராஜ் என்ற ஒரு சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டினையொட்டி கன்னி வெடிகளும், உள்நாட்டு வெடிகளும் வெடிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில், பூஞ்ச் பிரிவில், பாகிஸ்தான் எல்லைப் படை நடவடிக்கைக் குழு நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஒட்டுமொத்தப் பாதுகாப்பு நிலைமையானது சீர்குலைந்ததால், கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் பதட்டங்கள் வெடித்தன. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடானது படிப்படியாக அதிகரித்தபடியால், இருதரப்பு ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர்களும், 14 ஆண்டுகளில் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்க உடன்பட்டனர்.

இச்சந்திப்பின் நிமித்தம் சூழ்நிலையைத் தணிக்க உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், தரைமட்ட அளவில் சிறிய தாக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், 2014 இல் போர் நிறுத்த மீறுதல்கள் அதிகமாகிவிட்டன.

இரு தரப்பும் 2003 ஒப்பந்தத்தினை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு, அது நிகழ்ந்து எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாக ஒரு கற்பனை செய்துகொண்டாலும், அது நடைமுறை அனுபவமாகாது என்பதற்கு, 2013 ஆம் ஆண்டு நிகழ்வினையே நான் ஒரு உதாரணமாகக் கூறுகின்றேன்.

எந்தவிதமான ஒரு முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால், பாகிஸ்தான் தங்கள் சார்பிலிருந்து ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஊடுருவல் தொடரப்பட்டு இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் எல்லைக் கோட்டுப் பகுதியில் நிகழுமேயானால் அங்கு அமைதி நிலவ முடியாது.

இதற்கு காஷ்மீர் மீதான பாகிஸ்தானிய "ஆழமான நிலைப்பாடு" இப்பகுதியில் உள்ள இந்திய மேலாதிக்கத்திற்கும் மேலாக எழுந்து நிற்கும் நீடித்த ஆசை போன்றவைகளிலிருந்து, ஒரு குறிப்பிடத்தக்க அணுகுமுறை மாற்றம் தேவைப்படும்.

காலப்போக்கில் வளர்க்கப்பட்ட ஆனால் வெற்றிக்கு வழிகாட்டாத நம்பிக்கைகளுக்கு மேலாக யதார்த்தவாதமானது முன்னுரிமை பெற வேண்டிய ஒரு காலம் வருகிறது. நம்பிக்கை என்பது ஒரு உத்தி அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுவதைப் பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவே ஆகும்.

ஆகஸ்டு 2019 இல் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, இந்திய அரசு எடுத்த முடிவுகளானது இந்திய-பாகிஸ்தான்-காஷ்மீர் முக்கோணத்தைத் தரைமட்டமாக்கி, பாகிஸ்தானை சமன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டது.

பிரிவு 370 என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு முன்னேற்பாடு, இது இருதரப்புப் பிரச்சினை அல்ல. மேலும், இது குறித்த புகார்கள் சர்வதேச மன்றங்களில் குறைந்தபட்ச ஆதரவை மட்டுமே பெறும்.

ஏற்கனவே, பெரிதளவிலான உலக சமுதாயம் இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளது. கார்கில் மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள்ளேயே இப்படிப்பட்ட அபாயகரமான வழியில் நாடானது சென்றிருக்க வேண்டுமா என்றதொரு உள்நோக்கம் இருந்தது.

ஷாஹித் எம்.அமீன் என்ற ஒரு மூத்த இராஜதந்திரி, "நாடு (கட்டாயமாக) அதன் வரம்புகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து இரக்கமின்றி யதார்த்தமாக மாறியே ஆக வேண்டும் என்று எழுதினார். முதன்மையாக, காஷ்மீருடனான இணைப்பு உட்பட பாகிஸ்தானின் வாழ்வாதாரம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக முன்னிலை பெற்றிருக்க வேண்டும்.

கரோனா வைரஸூடனான தற்போதையப் போரானது, பாகிஸ்தானிலும் இதுபோன்றதொரு ஒரு ஆத்மார்த்தமான தேடலைத் தூண்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் அருகே அமைதி நிலவுவதற்கான அனைத்துப் பொறுப்பினையும், நான் பாகிஸ்தான் ராணுவத்தின் வாசலண்டையில் சுமத்தியுள்ளதாகத் தோன்றலாம்.

ஆனால், உண்மை அதுவேயாகும். இந்திய ராணுவமானது எல்லைப் பகுதியில் ஒரு ஆக்கிரமிப்புத் தோரணையைக் கொண்டுள்ளது. ஆனால் தண்டனையோடுகூடிய ஒரு போர்த் தந்திரத்தின் மூலம் ஊடுருவலைத் தடுப்பதே முதன்மையானதாகும்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவும் சூட்டினைத் தடுக்க வேண்டிய பந்து உறுதியாக பாகிஸ்தான் பக்கமே உள்ளது. எவ்வாறாயினும், இந்தியா தனது "பேச்சுவார்த்தையே வேண்டாம்" என்ற கொள்கையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், அதற்கு பாகிஸ்தான் நேர்மையாக முன்வருமேயானால், இந்தியா அதற்குச் சாதகமாகப் பதிலளிக்க வேண்டும். கோவிட்-19 க்கு எதிரான சார்க் முன்முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியதில் பிரதமர் மோடி காட்டியபடி, அரசியல்வாதம் என்பது காலத்தின் தேவை ஆகும்.

இரண்டு நாடுகளுமே ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சூட்டில், எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையக் காலக் கட்டத்தில், தற்போதைய மனிதாபிமான நெருக்கடியினைக் கூட்டாதிருப்பதே இந்தியா, பாகிஸ்தானின் கடமையாகும். எவ்வாறாயினும், எந்தவொரு நம்பிக்கையினையும் வளர்க்கும் நடவடிக்கையில் வெற்றி பெற வேண்டி, இரண்டு தரப்பினரும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கையை வளர்க்கத் தொடங்குதல் வேண்டும்.

அந்தப் பாலத்தினைக் கட்டுவதற்குக் கடந்த கால அனுமானங்கள் கைவிடப்பட வேண்டும். "உங்கள் அனுமானங்கள் உலகில் உங்களது ஜன்னல்கள்" என்ற ஐசக் அசிமோவின் ஆலோசனைக்கு நாம் செவி மடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அதைத் துடைத்து எறிய வேண்டும். இல்லையெனில் ஒளி உட்புகாது.

இதையும் படிங்க: இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

உலகம் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நாம் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையினைச் சமாளிக்க முயன்று கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கும் தருவாயில், தெற்கு ஆசியாவின் ஒரு பகுதியானது பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கிறது. கட்டுப்பாட்டுக் கோட்டின் எல்லையில் இந்திய, பாகிஸ்தானிய ராணுவங்களுக்கு இடையே குருதிப் போரானது குமுறிக் கொண்டிருக்கிறது.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் மாதம் மட்டும் 411 போர் நிறுத்த மீறல்கள் நடந்துள்ளன. இது, கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நடந்தேறிய மீறுதல்களைவிட, 50 விழுக்காடு அதிகமாகவும் 2018 ஆம் ஆண்டினைக் காட்டிலும் இரு மடங்குமாகும்.

ஏப்ரல் 5 அன்று, கெரான் பிரிவில் ஊடுருவ முயன்ற ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கையில் ஐந்து சிறப்புப் படையினர் உயிர்த் தியாகம் செய்து உள்ளனர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவமானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல், வெடிகுண்டுகள் மீதான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள காணொலியினை வெளியிட்டது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதேபகுதியில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இந்தியக் குடிமக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் ஒரு எட்டு வயது குழந்தையும் இருந்தது.

இத்தருணத்தில், வெளிப்படையாகவே சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நினைவுச் சின்ன விகிதமான நெருக்கடியினைக் கையாளும் தருணத்தில் எல்லைப் பகுதியெங்கும் ஒரு சமாதானக் காலத்தைக் கொண்டிருக்க முடியாதா? நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய பொதுவான எதிரியை எதிர்த்துப் போராடுவதில் நம்முடைய ஆற்றலைத் திசை திருப்ப வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை "ஆம்" என்பதே ஆகும்.

ஆனால், துரதிருஷ்டவசமான உண்மை என்னவென்றால், தார்மீகப் பரிமாணங்கள் எப்போதுமே தேசிய முடிவுகளைக் கட்டளையிடுவது இல்லை என்பதுதான். இரு ராணுவங்களின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர்களின் சொற்களின் அடிப்படையில்தான் எல்லைக் கோட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடானது நடத்தப்படுகிறது.

தரப்படும் நிலையான அறிக்கைகள் கூறுவதென்னவென்றால், "கடுமையானப் பதிலடி" கொடுக்கப்பட்ட மறுபுறத்தில், "தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூடு" நடத்தப்பட்டது என்பதேயாகும். ஆனால், உண்மையானது சற்று மாறாகவே இருக்கிறது.

போர் நிறுத்த மீறுதல்கள் என்பது வெறுமனே பதிலுக்குப் பதிலடி கொடுப்பதென்பது அல்ல. ஆனால், அது எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவ வேண்டியதொரு பெரியப் பாதுகாப்பு நிலைமையின் வெளிப்பாடாகும்.

கடந்த 2012 வரை இருதரப்பினருமே இந்தியா பாகிஸ்தான் இடையேயான 2003 போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பொதுவாகவே மதித்து வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் பகுதியில் இருந்த இந்திய ரோந்து வாகனத்தின் மீது ஒரு தாக்குதல் ஆரம்பித்தது. அதில் லான்ஸ் நாய்க் ஹேம்ராஜ் என்ற ஒரு சிப்பாயின் உடல் சிதைக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டினையொட்டி கன்னி வெடிகளும், உள்நாட்டு வெடிகளும் வெடிக்கப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில், பூஞ்ச் பிரிவில், பாகிஸ்தான் எல்லைப் படை நடவடிக்கைக் குழு நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஒட்டுமொத்தப் பாதுகாப்பு நிலைமையானது சீர்குலைந்ததால், கட்டுப்பாடு எல்லைக் கோட்டில் பதட்டங்கள் வெடித்தன. எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடானது படிப்படியாக அதிகரித்தபடியால், இருதரப்பு ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர்களும், 14 ஆண்டுகளில் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்க உடன்பட்டனர்.

இச்சந்திப்பின் நிமித்தம் சூழ்நிலையைத் தணிக்க உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், தரைமட்ட அளவில் சிறிய தாக்கம் மட்டுமே இருந்தது. ஆனால், 2014 இல் போர் நிறுத்த மீறுதல்கள் அதிகமாகிவிட்டன.

இரு தரப்பும் 2003 ஒப்பந்தத்தினை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வாய்மொழியாக ஏற்றுக்கொண்டு, அது நிகழ்ந்து எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதாக ஒரு கற்பனை செய்துகொண்டாலும், அது நடைமுறை அனுபவமாகாது என்பதற்கு, 2013 ஆம் ஆண்டு நிகழ்வினையே நான் ஒரு உதாரணமாகக் கூறுகின்றேன்.

எந்தவிதமான ஒரு முன்னேற்றம் ஏற்படவேண்டுமானால், பாகிஸ்தான் தங்கள் சார்பிலிருந்து ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஊடுருவல் தொடரப்பட்டு இந்திய வீரர்களின் உயிர்த் தியாகம் எல்லைக் கோட்டுப் பகுதியில் நிகழுமேயானால் அங்கு அமைதி நிலவ முடியாது.

இதற்கு காஷ்மீர் மீதான பாகிஸ்தானிய "ஆழமான நிலைப்பாடு" இப்பகுதியில் உள்ள இந்திய மேலாதிக்கத்திற்கும் மேலாக எழுந்து நிற்கும் நீடித்த ஆசை போன்றவைகளிலிருந்து, ஒரு குறிப்பிடத்தக்க அணுகுமுறை மாற்றம் தேவைப்படும்.

காலப்போக்கில் வளர்க்கப்பட்ட ஆனால் வெற்றிக்கு வழிகாட்டாத நம்பிக்கைகளுக்கு மேலாக யதார்த்தவாதமானது முன்னுரிமை பெற வேண்டிய ஒரு காலம் வருகிறது. நம்பிக்கை என்பது ஒரு உத்தி அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுவதைப் பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இதுவே ஆகும்.

ஆகஸ்டு 2019 இல் ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, இந்திய அரசு எடுத்த முடிவுகளானது இந்திய-பாகிஸ்தான்-காஷ்மீர் முக்கோணத்தைத் தரைமட்டமாக்கி, பாகிஸ்தானை சமன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டது.

பிரிவு 370 என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு முன்னேற்பாடு, இது இருதரப்புப் பிரச்சினை அல்ல. மேலும், இது குறித்த புகார்கள் சர்வதேச மன்றங்களில் குறைந்தபட்ச ஆதரவை மட்டுமே பெறும்.

ஏற்கனவே, பெரிதளவிலான உலக சமுதாயம் இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளது. கார்கில் மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள்ளேயே இப்படிப்பட்ட அபாயகரமான வழியில் நாடானது சென்றிருக்க வேண்டுமா என்றதொரு உள்நோக்கம் இருந்தது.

ஷாஹித் எம்.அமீன் என்ற ஒரு மூத்த இராஜதந்திரி, "நாடு (கட்டாயமாக) அதன் வரம்புகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து இரக்கமின்றி யதார்த்தமாக மாறியே ஆக வேண்டும் என்று எழுதினார். முதன்மையாக, காஷ்மீருடனான இணைப்பு உட்பட பாகிஸ்தானின் வாழ்வாதாரம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக முன்னிலை பெற்றிருக்க வேண்டும்.

கரோனா வைரஸூடனான தற்போதையப் போரானது, பாகிஸ்தானிலும் இதுபோன்றதொரு ஒரு ஆத்மார்த்தமான தேடலைத் தூண்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் அருகே அமைதி நிலவுவதற்கான அனைத்துப் பொறுப்பினையும், நான் பாகிஸ்தான் ராணுவத்தின் வாசலண்டையில் சுமத்தியுள்ளதாகத் தோன்றலாம்.

ஆனால், உண்மை அதுவேயாகும். இந்திய ராணுவமானது எல்லைப் பகுதியில் ஒரு ஆக்கிரமிப்புத் தோரணையைக் கொண்டுள்ளது. ஆனால் தண்டனையோடுகூடிய ஒரு போர்த் தந்திரத்தின் மூலம் ஊடுருவலைத் தடுப்பதே முதன்மையானதாகும்.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவும் சூட்டினைத் தடுக்க வேண்டிய பந்து உறுதியாக பாகிஸ்தான் பக்கமே உள்ளது. எவ்வாறாயினும், இந்தியா தனது "பேச்சுவார்த்தையே வேண்டாம்" என்ற கொள்கையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், அதற்கு பாகிஸ்தான் நேர்மையாக முன்வருமேயானால், இந்தியா அதற்குச் சாதகமாகப் பதிலளிக்க வேண்டும். கோவிட்-19 க்கு எதிரான சார்க் முன்முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியதில் பிரதமர் மோடி காட்டியபடி, அரசியல்வாதம் என்பது காலத்தின் தேவை ஆகும்.

இரண்டு நாடுகளுமே ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள மக்களுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கின்றன. ஆனாலும், தொடர்ந்து நடந்து வரும் துப்பாக்கிச் சூட்டில், எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையக் காலக் கட்டத்தில், தற்போதைய மனிதாபிமான நெருக்கடியினைக் கூட்டாதிருப்பதே இந்தியா, பாகிஸ்தானின் கடமையாகும். எவ்வாறாயினும், எந்தவொரு நம்பிக்கையினையும் வளர்க்கும் நடவடிக்கையில் வெற்றி பெற வேண்டி, இரண்டு தரப்பினரும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கையை வளர்க்கத் தொடங்குதல் வேண்டும்.

அந்தப் பாலத்தினைக் கட்டுவதற்குக் கடந்த கால அனுமானங்கள் கைவிடப்பட வேண்டும். "உங்கள் அனுமானங்கள் உலகில் உங்களது ஜன்னல்கள்" என்ற ஐசக் அசிமோவின் ஆலோசனைக்கு நாம் செவி மடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அதைத் துடைத்து எறிய வேண்டும். இல்லையெனில் ஒளி உட்புகாது.

இதையும் படிங்க: இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.