ETV Bharat / bharat

சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா?

author img

By

Published : Apr 11, 2020, 5:01 PM IST

டெல்லி: சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Modi
Modi

கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 13 முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர்களும் ஊரடங்கு நீட்டிப்புக்கு கூட்டத்தில் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சில கட்டுப்பாடுகள் மட்டும் தளர்த்தப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, உயிர்களைக் காப்பது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயிர்களைக் காப்பது போன்று பொருளாதாரமும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்' - அரவிந்த் கெஜ்ரிவால்

கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

நான்கு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 13 முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர்களும் ஊரடங்கு நீட்டிப்புக்கு கூட்டத்தில் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சில கட்டுப்பாடுகள் மட்டும் தளர்த்தப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, உயிர்களைக் காப்பது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் உயிர்களைக் காப்பது போன்று பொருளாதாரமும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்' - அரவிந்த் கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.