ETV Bharat / bharat

விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி!

author img

By

Published : Apr 5, 2020, 7:21 PM IST

பெங்களூரு: விளக்கேற்றுவதால் பகுத்தறிவு மற்றும் அறிவியல் ரீதியாக ஏதேனும் நன்மை உண்டா என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வியெழுப்பிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

HD Kumaraswamy  Candle-light  PM Modi  Virus outbreak  விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி!  நாடு தழுவிய பூட்டுதல், பிரதமர் நரேந்திர மோடி, குமாரசாமி, ட்வீட், ட்விட்டர்
HD Kumaraswamy Candle-light PM Modi Virus outbreak விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி! நாடு தழுவிய பூட்டுதல், பிரதமர் நரேந்திர மோடி, குமாரசாமி, ட்வீட், ட்விட்டர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல்5) அனைவரும் தங்களின் வீடுகளில் இரவு 9 மணிக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள். அந்த நேரத்தில் வீட்டிலுள்ள மின் விளக்குகளை ஒன்பது நிமிடங்கள் அணைத்து வையுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கேள்விகளை ட்விட்டரில் எழுப்பியுள்ளார். மேலும், “பாஜகவின் நிறுவனத் தினத்திற்கு முன்னதாக ஒரு மெழுகுவர்த்தி விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நயவஞ்சகமாகக் கேட்டுக் கொண்டுள்ளாரா?

  • The government is yet to provide PPEs for doctors and make test kits affordable for the common man. Without telling the nation what concrete steps are being taken to combat COVID-19 menace, the prime minister is giving meaningless tasks to an already exhausted population.
    2/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏப்ரல் 6ஆம் தேதி பாஜகவின் நிறுவன நாளாக இருப்பதால், இந்த நிகழ்விற்கான தேதி, நேரத்தை தேர்வு செய்துள்ளதைத் தவிர இதில் வேறு என்ன விளக்க முடியும்? இது தொடர்பாக நம்பகமான அறிவியல், பகுத்தறிவு விளக்கம் ஏதேனும் உள்ளதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

  • It is shameful to convert the national crisis into an event of self aggrandizement & it is beyond shameful to push the hidden agenda of his party in the face of global calamity. May sense prevail upon the PM;

    ಕರುಣಾಳು ಬಾ ಬೆಳಕೆ
    ಮುಸುಕಿದೀ ಮಬ್ಬಿನಲಿ..
    ಕೈ ಹಿಡಿದು
    ನಡೆಸೆನ್ನನು.....

    3/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மற்றொரு ட்வீட்டில் அரசாங்கம் இன்னமும் மருத்துவர்களுக்குப் போதிய மருத்துவ உபகரணங்களை வழங்கவில்லை. சாமானியர்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கவில்லை. கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராட அரசாங்கம் எடுத்துள்ள உறுதியான நடவடிக்கை என்னவென்று கூறவில்லை. இந்நிலையில் மக்களுக்கு அர்த்தமற்றப் பணிகளை வழங்கியுள்ளார்.

தேசிய அளவிலான மருத்துவ நெருக்கடியைச் சாதாரண நிகழ்வாக மாற்றுவது வெட்கக்கேடானது” எனவும் கூறியுள்ளார்.

நாடு தழுவிய கோவிட்-19 பூட்டுதலுக்கு மத்தியில், தொற்றால் பரவியிருக்கும் இருளை எதிர்த்துப் போராட ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: இன்று ஏன் ஒளியேற்ற வேண்டும்? விளக்குகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல்5) அனைவரும் தங்களின் வீடுகளில் இரவு 9 மணிக்கு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுங்கள். அந்த நேரத்தில் வீட்டிலுள்ள மின் விளக்குகளை ஒன்பது நிமிடங்கள் அணைத்து வையுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கேள்விகளை ட்விட்டரில் எழுப்பியுள்ளார். மேலும், “பாஜகவின் நிறுவனத் தினத்திற்கு முன்னதாக ஒரு மெழுகுவர்த்தி விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நயவஞ்சகமாகக் கேட்டுக் கொண்டுள்ளாரா?

  • The government is yet to provide PPEs for doctors and make test kits affordable for the common man. Without telling the nation what concrete steps are being taken to combat COVID-19 menace, the prime minister is giving meaningless tasks to an already exhausted population.
    2/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஏப்ரல் 6ஆம் தேதி பாஜகவின் நிறுவன நாளாக இருப்பதால், இந்த நிகழ்விற்கான தேதி, நேரத்தை தேர்வு செய்துள்ளதைத் தவிர இதில் வேறு என்ன விளக்க முடியும்? இது தொடர்பாக நம்பகமான அறிவியல், பகுத்தறிவு விளக்கம் ஏதேனும் உள்ளதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

  • It is shameful to convert the national crisis into an event of self aggrandizement & it is beyond shameful to push the hidden agenda of his party in the face of global calamity. May sense prevail upon the PM;

    ಕರುಣಾಳು ಬಾ ಬೆಳಕೆ
    ಮುಸುಕಿದೀ ಮಬ್ಬಿನಲಿ..
    ಕೈ ಹಿಡಿದು
    ನಡೆಸೆನ್ನನು.....

    3/3

    — H D Kumaraswamy (@hd_kumaraswamy) April 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மற்றொரு ட்வீட்டில் அரசாங்கம் இன்னமும் மருத்துவர்களுக்குப் போதிய மருத்துவ உபகரணங்களை வழங்கவில்லை. சாமானியர்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கவில்லை. கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராட அரசாங்கம் எடுத்துள்ள உறுதியான நடவடிக்கை என்னவென்று கூறவில்லை. இந்நிலையில் மக்களுக்கு அர்த்தமற்றப் பணிகளை வழங்கியுள்ளார்.

தேசிய அளவிலான மருத்துவ நெருக்கடியைச் சாதாரண நிகழ்வாக மாற்றுவது வெட்கக்கேடானது” எனவும் கூறியுள்ளார்.

நாடு தழுவிய கோவிட்-19 பூட்டுதலுக்கு மத்தியில், தொற்றால் பரவியிருக்கும் இருளை எதிர்த்துப் போராட ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றி வைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: இன்று ஏன் ஒளியேற்ற வேண்டும்? விளக்குகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.