ETV Bharat / bharat

கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா - கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

பெங்களூரு: நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது, நமக்கு வேறு வழியில்லை. இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா
கரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: எடியூரப்பா
author img

By

Published : Jul 6, 2020, 11:07 PM IST

கரோனா பரவலை தடுக்க வேறு வழியில்லாததால், நாடு கரோனா வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபு ஜகஜீவன் ராமின் நினைவுநாளில், விதான சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது, "நமக்கு வேறு வழியில்லை, இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார்.

நாம் ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்துள்ளோம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இது மிகவும் முக்கியமானது நம்மைப் பாதுகாக்க” என்றார்.

மேலும், “இந்த பரவல் நோயை எதிர்த்துப் போராட மாநில அரசு பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அளித்த தகவலின் படி, கர்நாடகா மாநிலத்தில் 23 ஆயிரத்து 474 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 372 பேர் இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ’ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்’

கரோனா பரவலை தடுக்க வேறு வழியில்லாததால், நாடு கரோனா வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபு ஜகஜீவன் ராமின் நினைவுநாளில், விதான சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது, "நமக்கு வேறு வழியில்லை, இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார்.

நாம் ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்துள்ளோம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இது மிகவும் முக்கியமானது நம்மைப் பாதுகாக்க” என்றார்.

மேலும், “இந்த பரவல் நோயை எதிர்த்துப் போராட மாநில அரசு பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் அளித்த தகவலின் படி, கர்நாடகா மாநிலத்தில் 23 ஆயிரத்து 474 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 372 பேர் இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ’ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.