உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் குற்றச்சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த என்கவுன்ட்டர்கள், சில நாள்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியை ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த விவகாரங்கள் நடந்தன.
இதன் தொடர்ச்சியாக தற்போது கான்பூரைச் சேர்ந்த சஞ்சீத் யாதவ் என்ற நபரை கடத்தி பணம் கேட்டு குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். ரவுடிகள் கேட்ட பணத்தை கொடுத்த பின்னரும், சஞ்சீத் யாதவை கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![பிரியங்கா காந்தி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8151603_gg.jpg)