ETV Bharat / bharat

விவசாய பிரச்னையில் எதிர்க்கட்சிகளைத் தாக்கும் ஹரியானா முதலமைச்சர்

author img

By

Published : May 14, 2020, 5:12 PM IST

சண்டிகர்: பயிர் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்னைகளை உருவாக்குவதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா முதலமைச்சர்
ஹரியானா முதலமைச்சர்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஹரியானா முதலமைச்சர் கட்டார், பயிர் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்னைகளை உருவாக்குவதாக தெரிவித்தார்.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "பயிர்க் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோதுமை, கடுகு கொள்முதலில் தவறு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. கொள்முதல் முறை முழுவதும் "மேரி பசால் மேரா பியோரா" என்ற போர்ட்டலில் இணைக்கப்பட்டு இ-கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ஐந்து முதல் ஆறு நாட்களில் பணம் செலுத்தப்படுகிறது. "மேரா பானி, மேரா விரசாட்" திட்டத்தின் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திட்டங்கள் கடைநிலை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்க - மாயாவதி

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஹரியானா முதலமைச்சர் கட்டார், பயிர் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, எதிர்க்கட்சிகள் தேவையின்றி பிரச்னைகளை உருவாக்குவதாக தெரிவித்தார்.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "பயிர்க் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோதுமை, கடுகு கொள்முதலில் தவறு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. கொள்முதல் முறை முழுவதும் "மேரி பசால் மேரா பியோரா" என்ற போர்ட்டலில் இணைக்கப்பட்டு இ-கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ஐந்து முதல் ஆறு நாட்களில் பணம் செலுத்தப்படுகிறது. "மேரா பானி, மேரா விரசாட்" திட்டத்தின் மூலம் தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: திட்டங்கள் கடைநிலை வரை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்க - மாயாவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.